இங்கிலாந்தின் இரண்டாம் மேரி
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் மேரி (Mary II, 30 ஏப்ரல் 1662 – 28 டிசம்பர் 1694) என்பவர் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் அரசியாக அவரது கணவர் மூன்றாம் வில்லியத்துடன் இணைந்து 1689 முதல் அவரது இறப்பு வரை ஆட்சி செய்தார். இவர்களின் ஆட்சி வரலாற்றாளர்களால் வில்லியமும் மேரியும் இணைந்த ஆட்சி என வர்ணிக்கப்படுகிறது. வில்லியமும் மேரியும் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். மாண்புமிகு புரட்சியின் பின்னர் வில்லியம் அரசராகவும், மேரி அரசியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் மூலம் மேரி ஆங்கிலேய உரிமைகளின் சட்டவரைவை ஏற்றுக் கொண்டு, தனது உரோமன்-கத்தோலிக்கத் தந்தை இரண்டாம் யேம்சின் உரிமையையும் விட்டுக் கொடுத்தார். 1694 இல் மேரி இறந்ததை அடுத்து வில்லியம் 1702 இல் இறக்கும் வரை தனித்து ஆட்சி செய்தார். வில்லியத்துக்குப் பின்னர் மேரியின் சகோதரி ஆன் முடி சூடினார்.
இரண்டாம் மேரி Mary II | |
---|---|
சர் காட்ஃபிரி நெல்லர் 1690 இல் வரைந்தது | |
இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து அரசி | |
ஆட்சிக்காலம் | 1689[lower-alpha 1] – 28 டிசம்பர் 1694 |
பிரித்தானியா | 11 ஏப்ரல் 1689 |
முன்னையவர் | இரண்டாம் யேம்சு |
பின்னையவர் | மூன்றாம் வில்லியம் |
இணை-ஆட்சியாளர் | மூன்றாம் வில்லியம் |
பிறப்பு | 30 ஏப்ரல் 1662 (புதிய நாட்காட்டி: 10 மே 1662) சென் யேம்சு அரண்மனை, இலண்டன் |
இறப்பு | 28 டிசம்பர் 1694 (அகவை 32) (புதிய நாட்காட்டி: 7 சனவரி 1695) கென்சிங்டன் அரண்மனை, இலண்டன் |
புதைத்த இடம் | 5 மார்ச் 1695 வெஸ்ட்மின்ஸ்டர் மடம், இலண்டன் |
கணவர் | இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (தி. 4 நவம்பர் 1677) |
மரபு | இசுடுவர்ட் மாளிகை |
தந்தை | இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு |
தாய் | ஆன் ஹைடு |
மதம் | ஆங்கிலிக்கம் |
கையொப்பம் |
வில்லியம் இங்கிலாந்தில் இருந்த போது, மேரி தனது பெருமாலான அதிகாரங்களை தனது கணவருக்கு அளித்து விட்டார். ஆனாலும், வில்லியம் வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேரி தனித்தே செயல்பட்டார். இதன் மூலம் அவர் ஒரு சக்தி வாய்ந்த, உறுதியான, திறமையான ஆட்சியாளராக தன்னை நிரூபித்துக் கொண்டார்.