கபுர்த்தலா
From Wikipedia, the free encyclopedia
கபுர்த்தலா, (பஞ்சாபி: ਕਪੂਰਥਲਾ) என்னும் நகரம், இந்திய மாநிலமான பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ளது. வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் கபுர்த்தலா ஆகும். கபுர்த்தலா மாவட்டத்தின் நிலப்பரப்புகள் ஜலந்தர் மாவட்டத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ளது. இங்கு கஞ்சிலி நீர்ப்பரப்பு, எலிசி அரண்மனை, ஷாலிமார் தோட்டம் ஆகியன அமைந்துள்ளன.[1]
இது பிரித்தானிய இந்தியாவில் சுதேச மன்னர்கள் காலத்தில் கபுர்த்தலா மாநிலத்தின் தலைநகராக இருந்தது (அலுவாலியா வம்சத்தால் ஆளப்பட்டது). பிரஞ்சு மற்றும் இந்தோ சரசனிக் பாணி கட்டிடக்கலை அடிப்படையிலான அதன் முக்கிய கட்டிடங்களுடன் நகரத்தின் மதச்சார்பற்ற மற்றும் அழகியல் கலவை அதன் சுதேச கடந்த காலத்தை சுயமாக விவரிக்கிறது. இது அரண்மனைகள் மற்றும் தோட்டங்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கபுர்த்தலா இந்தியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இது ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.[2] இங்கு 101,654 மக்கள் வாழ்கின்றனர்.
இம்மாவட்டத்தில் பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறுகள் பாய்கிறது. இம்மாவட்டத்தின் பொருளாதாரம் கோதுமை, நெல், கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற வேளாண் விளைபொருட்களைச் சார்ந்துள்ளது. இம்மாவட்டம் கோடைக்காலத்தில் கடும் வெப்பமும்; குளிர்காலத்தில் கடும் குளிரையும் கொண்டுள்ளது.