கயிலை மலை
From Wikipedia, the free encyclopedia
கயிலாய மலை அல்லது கைலாயம் என்பது இமயமலையில் உள்ள கயிலை மலைதொடரில் உள்ள ஒரு பர்வதம் ஆகும். 6,638 மீ. உயரம் கொண்ட இந்த பர்வதம் சீனாவின் திபெத் பகுதியில் அமைந்துள்ளது.
கயிலாய மலை | |
---|---|
கயிலாய மலையின் வடபகுதி | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,638[1][2] m (21,778 அடி) |
புடைப்பு | 1,319 m (4,327 அடி) |
ஆள்கூறு | 31°4′0″N 81°18′45″E |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் |
|
புவியியல் | |
அமைவிடம் | திபெத்து |
நாடு | சீனா |
மூலத் தொடர் | கங்திசே தொடர் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | ஏறபடவில்லை (தடைசெய்யப்பட்டது) |
இதனருகே மானசரோவர் நன்னீர் ஏரியும், இராட்சதலம் எனும் உப்பு நீர் ஏரியும் உள்ளன. சிந்து, சத்லஜ், பிரம்மபுத்திரா மற்றும் கர்னாலி ஆகிய நான்கு நதிகளின் ஆதாரங்கள் இப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளன. கயிலாய மலையானது இந்துக்கள், பௌத்தர்கள், போன் மக்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.
இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பிற நாடுகளில் இருந்து பக்தர்கள் கயிலாய மலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இங்கு வரும் யாத்திரிகர்கள் மானசரோவர் ஏரியில் புனித நீராடிவிட்டு பின்னர் கயிலாய பர்வதத்தின் அடிவாரத்தைச் சுற்றி வலம் வருவதை புனித கடமையாகக் கருதுகிறார்கள்.