கரோலின் எர்ழ்செல்
செருமானிய-பிரித்தானிய வானியலாளர் / From Wikipedia, the free encyclopedia
கரோலின் லுக்கிரெட்டியா எர்செல் (Caroline Lucretia Herschel, 16 மார்ச் 1750 – 9 சனவரி 1848) ஒரு செருமானிய வானியலாளர். இவர் சர் வில்லியம் ஹெர்ச்செல்லின் தங்கை. இருவரும் வாழ்நாள் முழுவதும் வானியலில் ஒன்றாகவே பணிபுரிந்தனர். இவரது முதன்மை வாய்ந்த பணி வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பாகும். குறிப்பாக இவர் பெயரில் வழங்கும் 35பி/ஹெர்ச்செல்-ரிகோல்லேட் எனும் பருவமுறை வருகைதரும் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார்.[1]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கரோலின் எர்செல் Caroline Herschel | |
---|---|
பிறப்பு | கரோலின் லுக்கிரெட்டியா எர்செல் (1750-03-16)16 மார்ச்சு 1750 அனோவர், புனித உரோமைப் பேரரசு |
இறப்பு | 9 சனவரி 1848(1848-01-09) (அகவை 97) அனோவர் |
தேசியம் | செருமானியர் |
துறை | வானியல் |
அறியப்படுவது | வால்வெள்ளிகள் கண்டுபிடிப்பு |
விருதுகள் | அரச வானியல் கழகப் பொற் பதக்கம் (1828) அறிவியலுக்கான புருசியப் பொற் பதக்கம் (1846) |
இவர் அறிவியல் பணிக்காகச் சம்பளம் பெற்ற முதல் பெண்மணியும் அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் பெற்ற முதல் பெண்மணியும் ஆவார் (1828). இவர்1835இல் மேரி சோமர்வில்லியுடன் அரசு வானியல் கழகத்தின் தகைமை உறுப்பினர் ஆனார். இவர் 1838இல் ஐரிழ்சு கல்விக் கழகத்தின் தகைமை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். பிரசிய அரசர் 1846இல் அதாவது 96ஆம் அகவையில் இவருக்கு அறிவியலுக்கான பொற்பதக்கம் அளித்து பெருமைப்படுத்தினார்.[2]