கலப்பு வில்
From Wikipedia, the free encyclopedia
கலப்பு வில் என்பது கொம்பு, மரம், மற்றும் தசைநார் ஆகியவற்றால் ஆன ஒரு பாரம்பரிய வில், (பல்லடுக்கு வில்லுடன் ஒப்பிடுக). மர உள்ளகத்தின் உட்பக்கத்தில் (வில்லாளியின் பக்கம்) கொம்பும் , வெளிப்பக்கம் தசைநாரும் இருக்கும். வில்லை இழுக்கையில், தசைநார் (வெளிப்புறமாக விரிந்து) மற்றும் கொம்பு (உட்புறமாக அழுத்தப்பட்டு) இரண்டும் இணைந்து, அதே நீளமுள்ள மரத்தாலான வில்லைவிட அதிக சக்தியை சேமிக்கும். ஒருமர வில்லின் வலிமையும், இழு-நீளத்தையும் ஒத்து இதை தயாரிக்க இயலும். இதனால் குறைந்த நீளம்கொண்ட வில்லில் இருந்து, அதே அளவு ஆற்றலோடு அம்பை செலுத்த முடியும். இருப்பினும், கலப்பு வில்லை உருவாக்க ஒருமர வில்லைவிட அதிக வகைகளான மூலபொருட்கள் தேவை, இதை உருவாக்கவும் அதிக நேரம் பிடிக்கும். இவ்வாறு உருப்பெற்ற வில் ஈரப்பதத்தால் பாதிப்படையும்.
நாடோடிப் பழங்குடிகளின் உறவைபெற்ற இராணுவ நாகரீகங்களில், இவ்வகை வில்கள் பரவின; கலப்பு வில்கள் ஆசியா முழுவதும் உபயோகத்தில் இருந்தது, கொரியாவிலிருந்து ஐரோப்பாவின் அட்லாண்டிக் கரைகள், வடக்கு ஆப்பிரிக்கா, தெற்கில் அராபிய தீபகற்பம் மற்றும் இந்தியா வரை இதன் உபயோகம் நீண்டது.
இவ்வில்லை பயன்படுத்திய வெவ்வேறு கலாச்சாரங்களில் இதன் தயாரிப்பு முறையும் மாறுபடும். முதலில், கிளையின் முனைகள் வில்லை வளைபடும். பின்னர், முனைகள் எலும்பால், அல்லது மான்கொம்பினால் ஆன சட்டங்களால் திடமாக்கப்பட்டது. முனைகள் திடமான வில்லை 'சியா' என்றழைப்பர்.
இதர வில்களைப் போல, இவைகளும் துப்பாக்கியின் அறிமுகத்தால் முக்கியத்துவத்தை இழந்தது.