காலங்காட்டிகளின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நேரத்தை அளக்கவும் கண்காணிக்கவும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அறுபதற்குரிய முறை நேர அளவீடானது சுமரில் ஏறத்தாழ கி.மு 2000 ஆண்டு காலத்தைச் சேர்ந்ததாகும். புராதன எகிப்தியர்கள் ஒரு நாளை இரண்டு 12-மணிநேர காலங்களாகப் பிரித்து, சூரியனின் நகர்வைத் தடமறிவதற்கு பெரிய சதுரத்தூபிகளைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நீர்க் கடிகாரங்களையும் உருவாக்கினார்கள். இது முதன்முதலில் அநேகமாக அமுன்-ரி எல்லைப்பகுதியில் (Precinct of Amun-Re) பயன்படுத்தப்பட்டு, பின்னர் எகிப்துக்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது. புராதன கிரேக்கர்கள் இவற்றை பெரும்பாலும் பயன்படுத்தினார்கள். அவர்கள் அவற்றை நீர்க் கடிகாரம் (கிளெப்சிட்ராக்கள்) என அழைத்தார்கள். கிட்டத்தட்ட அதே காலத்தில் ஷாங் மன்னர் பரம்பரையானது நீர் வழிந்தோடும் கடிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இக்கடிகாரங்கள் கி.மு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபோடோமியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும். பிற புராதன காலங்காட்டும் கருவிகளில் சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்தி கடிகாரம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டைம்ஸ்டிக் (timestick) மற்றும் நீர்க் கடிகாரம் போல இயங்கிய மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி ஆகியவை உள்ளடங்கும்.
இந்த கட்டுரைக்கு நிபுணரின் கவனம் தேவைப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உரையாடல் பக்கத்தினை பார்க்க. விக்கித்திட்டம் Mathematics வழியாக ஒரு நிபுணரைத் தேட உதவலாம். |
ஆரம்பகால கடிகாரங்கள் சூரியன் ஏற்படுத்துகின்ற நிழல்களைச் சார்ந்திருந்தன. ஆகவே மேகமூட்டமான வானிலையில் அல்லது இரவில் இவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், பருவகாலம் மாறும்போது (புவி அச்சுடன் கதிரவனின் உயரத்தை அளக்க உதவும் கோல் கொண்ட வானியல் கருவி வரிசையாக இருக்கவில்லை என்றால்)மீண்டும் அளவுத்திருத்தம் செய்யவேண்டியும் இருந்தது. சுழற்சி ஆற்றலை விட்டு விட்டு நிகழும் அசைவுகளாக மாற்றிய, நீரினால் இயங்கும் ஒழுங்குபடுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறையுடன் ஆரம்பகாலத்திலிருந்த கடிகாரமானது,[1] கி.மு மூன்றாம் நூற்றாண்டு புராதன கிரீஸ் காலத்துக்குரியதாகும்.[2] பின்னர் சீனப் பொறியியலாளர்கள் பாதரசத்தினால் இயங்கும் ஒழுங்குபடுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறைகள் ஒன்றாய் சேர்ந்திருக்கின்ற கடிகாரங்களை பத்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர்.[3] இதையடுத்து 11 ஆம் நூற்றாண்டில் பற்சக்கர அமைப்புகள் மற்றும் பாரங்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் நீர்க் கடிகாரங்களை அரபிய பொறியியலாளர்கள் கண்டுபிடித்தனர்.[4]
எல்லைக்கோடு ஒழுங்குபடுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறையைக் கொண்டுள்ள இயந்திரமுறைக் கடிகாரங்கள் 14 ஆம் நூற்றாண்டின் போது ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டன. இது, 16 ஆம் நூற்றாண்டில் கம்பிச்சுருள் மூலம் இயங்கும் கடிகாரம் மற்றும் சட்டைப்பைக் கடிகாரம் வரும் வரை வழக்கமான காலங்காட்டும் கருவியாக இருந்தது. இதையடுத்து 18 ஆம் நூற்றாண்டில் ஊசற் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின்போது, படிகக்கல் ஊசலாட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்பின்னர் அணு கடிகாரங்கள் வந்தன. படிகக்கல் ஊசலாட்டங்கள் முதன்முதலில் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட போதிலும், அவை எளிதாகத் தயாரிக்கக் கூடியதாகவும், துல்லியமானவையாகவும் இருந்தன. இது கைக்கடிகாரங்களில் அவற்றைப் பயன்படுத்த வழிகோலியது. தொடக்க காலத்தைச் சேர்ந்த காலங்காட்டும் கருவி அனைத்தை விடவும் அணு கடிகாரங்கள் மிகவும் துல்லியமானவை. மேலும் பிற கடிகாரங்களை அளவுதிருத்தவும், பூமியில் சரியான நேரத்தைக் கணிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. தரப்படுத்திய ஒரு பொது முறையான ஒருங்கிணைக்கப்பட்ட பொதுவான நேரம் (Coordinated Universal Time) அணு நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது.