சமய சீயோனிசம்
From Wikipedia, the free encyclopedia
சமய சீயோனிசம் (Religious Zionism; எபிரேயம்: צִיּוֹנוּת דָּתִית, அல்லது பின்னப்பட்ட பிடிப்பான தொப்பி என்ற பொருள்) என்பது சீயோனிசம் மற்றும் யூத சமயத்தை கடைப்பிடிப்பவர்களும் இணைந்த ஒரு கருத்தியலாகும்.
இசுரேல் அரசு உருவாகு முன், பிரதானமாக சமய சீயோனியர்கள் சமயத்தை கடைப்பிடிக்கும் யூதர்களாக, பாலத்தீனத்தில் அல்லது இசுரேல் தேசத்தில் யூத அரசை உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவளித்தனர்.
ஆறு நாள் போர் போரின் பின்னும் மேற்குக் கரை கைப்பற்றப்பட்ட பின்னும், அப்பகுதிகள் யூத சொற்பிரயோகத்தின்படி யூதேயா சமாரிய என அழைக்கப்பட்டதுடன், சமய சீயோனிச இயக்கத்தின் வலதுசாரிகள் தேசிய தேசியவாதிகளை மீள் இணைத்து பின் சீயோனிசத்தினுள் பரிணமித்தனர். அவர்களின் கருத்தியல் மூன்று தூண்களினால் சுழல்கிறது. அவை முறையே: இசுரேல் நிலம், இசுரேல் மக்கள், இசுரேலின் தோரா என்பனவாகும்.[1]