சௌந்தரிய லகரி உரை
From Wikipedia, the free encyclopedia
சௌந்தரிய லகரி உரை என்னும் உரைநூலானது சௌந்தர்ய லகரி என்னும் நூல் தோன்றிய 16 நூற்றாண்டிலேயே எழுதப்பட்டது. இந்த உரையின் சிறப்புப் பாயிரப் பாடலில் இந்த உரையாசிரியரின் பெயர் தாழைநகர் எல்லான் எனக் குறிபிடப்பட்டுள்ளது. இந்த எல்லானே எல்லப்ப நாவலர் என அறிஞர் மு. அருணாசலம் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
சௌந்தரியம் என்பது இங்குத் தேவியின் அழகினைக் குறிக்கும்.