டெலி சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
டெலி (Deli) என்பது கிழக்கு சுமாத்திராவில் 1630 இல் வெறும் 1,820 km² பரப்பளவில் தாலிக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அரசு ஆகும். 1630 முதல் 1814 வரை ஒரு சிற்றரசாக இருந்த இவ்வரசு, 1814 இல் சியாக் சுல்தானகத்திடமிருந்து விடுதலை பெற்று ஒரு தனி சுல்தானகமாகியது.
டெலி சுல்தானகம் | |
---|---|
1630–1945 | |
தலைநகரம் | பழைய டெலி, லபுகான் டெலி, மேடான் |
பேசப்படும் மொழிகள் | மலாயு |
சமயம் | இசுலாம் |
அரசாங்கம் | முடியாட்சி |
துவாங்கு பங்லிமா, சுல்தான் | |
வரலாறு | |
• தொடக்கம் | 1630 |
• முடிவு | 1945 |
இந்தோனேசிய வரலாறு ஒரு பகுதி |
---|
மேலும் பார்க்க: |
வரலாற்றுக்கு முன் |
பண்டைய அரசுகள் |
கூத்தாய் (4ஆம் நூற்றாண்டு) |
தருமநகரா (358–669) |
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்) |
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்) |
சைலேந்திர வம்சம் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்) |
சுந்தா அரசு (669–1579) |
மெடாங்க அரசு (752–1045) |
கெடிரி அரசு (1045–1221) |
சிங்காசாரி அரசு (1222–1292) |
மயாபாகித்து (1293–1500) |
முசுலிம் அரசுகளின் எழுச்சி |
இசுலாத்தின் பரவல் (1200–1600) |
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்) |
மலாக்கா சுல்தானகம் (1400–1511) |
தெமாகு சுல்தானகம் (1475–1548) |
அச்சே சுல்தானகம் (1496–1903) |
பந்தான் சுல்தானகம் (1526–1813) |
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்) |
ஐரோப்பியக் குடியேற்றவாதம் |
போர்த்துக்கேயர் (1512–1850) |
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800) |
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942) |
இந்தோனேசியாவின் தோற்றம் |
தேசிய விழிப்புணர்வு (1908–1942) |
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45) |
தேசியப் புரட்சி (1945–50) |
இறைமையுள்ள இந்தோனேசியா |
தாராளமய மக்களாட்சி (1950–57) |
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65) |
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66) |
புத்தாக்கம் (1966–98) |
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்) |
15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அச்சேயின் ஆட்சியாளர் இசுலாத்தைத் தழுவிக் கொண்டார்.[1] அச்சே சுல்தானகத்தின் ஆட்சியாளர் அலீ முகாயத் ஷாஹ் 1520 இலிருந்து வடக்கு சுமாத்திராவில் தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார்.[2] பின்னர், அச்சே சுல்தான் இசுக்கந்தர் முடா பல்வேறு அரசுகளையும் வெற்றி கொண்டு தன் அதிகாரத்தை வலுப்படுத்தினார். 1612 இல், டெலி சுல்தானகத்தைப் படை வலிமையால் வென்ற அச்சே சுல்தானகம், டெலியைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. டெலியின் ஒரு பகுதி ஏற்கனவே சியாக் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது. எனினும், 1861 இல் இது தொடர்பிற் தலையிட்ட ஒல்லாந்தர் அச்சே மற்றும் சியாக் சுல்தானகங்களிடமிருந்து விடுதலை பெற்ற அரசாக டெலியை அங்கீகரித்தனர்.
தற்காலத்தில் இது இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக உள்ளது.