தேசிய இடைக்காலப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவை (National Transitional Council of Libya, அரபி: المجلس الوطني الإنتقالي, al-majlis al-waṭanī al-'intiqālī), சில நேரங்களில் இடைக்காலத் தேசியப் பேரவை (Transitional National Council),[2](Interim National Council),[3] அல்லது லிபிய தேசியப் பேரவை (Libyan National Council), 2011 லிபிய எழுச்சியைத் தொடர்ந்து கதாஃபிக்கு எதிரான இயக்கத்தினர் அமைத்த அரசு அமைப்பு ஆகும். இதன் உருவாக்கம் 27 பெப்ரவரி 2011 அன்று பெங்காசியில் அறிவிக்கப்பட்டது. அப்போது இதன் நோக்கமாக " புரட்சியாளர்களின் அரசியல் இடைமுகமாக" அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 5, 2011 அன்று "தான் மட்டுமே லிபியா மற்றும் லிபிய மக்களை பிரதிநிதிப்படுத்தும் சட்டபூர்வ அமைப்பாக" அறிவித்தது.[4][5][6]
தேசிய இடைக்காலப் பேரவை (லிபியக் குடியரசு) المجلس الوطني الانتقالي al-majlis al-waṭanī al-intiqālī | |
---|---|
குறிக்கோள்: சுதந்திரம், நீதி, மக்களாட்சி | |
நாட்டுப்பண்: லிபியா,லிபியா,லிபியா | |
தலைநகரம் | திரிப்பொலி[1] |
ஆட்சி மொழி(கள்) | லிபிய அராபி (de facto) பெர்பேர் வழக்குமொழிகள் நஃபூசி மொழி |
மக்கள் | லிபியன் |
அரசாங்கம் | காபந்து அரசு |
• தலைவர் | முசுதஃபா அப்துல் ஜலீல் |
• துணைத்தலைவர் | அப்துல் ஹஃபீஸ் கோகா |
• பிரதம அமைச்சர் | [மகமூது ஜிப்ரில் |
நிறுவுதல் | |
17 பெப்ரவரி 2011 | |
• தேசியப் பேரவை நிறுவப்பட்டது | 27 பெப்ரவரி 2011 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | LY |
மார்ச்சு 23,2011 அன்று இப்பேரவை மகமூது ஜிப்ரில் தலைமையில் ஓர் செயற்குழுவை அமைத்தது. லிபியாவில் ஓர் முறையான அரசமைபு ஏற்படும்வரை இப்பேரவையே சட்டபூர்வ அரசமைப்பாக பன்னாட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.[7] ஐக்கிய நாடுகள் அவையிலும் லிபியாவின் இடத்தை பெற்றுள்ளது.[8] மேலும் பல நாடுகள் அலுவல்முறையல்லாத தொடர்புகளை தேசிய இடைக்காலப் பேரவையுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ளன; அவற்றில் சில பேரவை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள நிரந்த தூதரகங்களை பெங்காசியில் ஏற்படுத்தி உள்ளன.