நர்கந்தா
சிம்லாவில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
நர்கந்தா (Narkanda) என்பது இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகரப் பஞ்சாயத்து ஆகும். இது இமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்துஸ்தான்-திபெத் சாலையில் (என்ஹெச் 5) 2708 மீட்டர் உயரத்தில் ஒரு தேவதாரு காட்டுக்குள் உள்ளது. இது சிம்லாவிலிருந்து சுமார் 65 கி.மீ தூரத்தில் உள்ளது. மேலும் இமயமலை மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் நர்கந்தா, நாடு ...
நர்கந்தா | |
---|---|
Town | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | சிம்லா |
வட்டம் | குமாரசைன்]] |
ஏற்றம் | 2,708 m (8,885 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,712 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 171213 |
மூடு
இது குளிர்காலத்தில் ஒரு பனிச்சறுக்கு இடமாகும் . இது சிம்லாவை இராம்பூருடன் இணைக்கிறது. மேலும் இமாச்சலப் பிரதேசத்தின் பிரதான ஆப்பிள் தோட்டங்களுக்கான இணைப்பான தானேதருக்கு ஒரு மாற்றுப்பாதையாக இருக்கிறது. அங்கு சத்யானந்தா ஸ்டோக்ஸ் [1] என்ற அமெரிக்கர் ஆப்பிள் சாகுபடியை இமாச்சல பிரதேசத்திற்கு அறிமுகப்படுத்தினார்.