பிரேசிலின் விடுதலை
From Wikipedia, the free encyclopedia
பிரேசிலின் விடுதலை (Independence of Brazil) 1821–1824 காலகட்டத்தில் நிகழ்ந்த தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகளை குறிப்பதாகும். இந்தக் காலகட்டத்தில் பிரேசில் பேரரசு கோரிய விடுதலையை எதிர்த்து பிரேசிலுக்கும் போர்த்துக்கல்லிற்கும் இடையே பிணக்கு உண்டாயிற்று. பிரேசிலின் விடுதலையை இளவரசர் டொம் பெட்ரோ அறிவித்த செப்டம்பர் 7ஆம் நாள் பிரேசிலின் விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. முறையான அங்கீகாரம் பிரேசிலிற்கும் போர்த்துக்கல்லிற்கும் இடையே கையொப்பமிட்ட உடன்பாட்டின்படி 1825 இலையுதிர்காலத்தில் கிடைத்தது.