புனித உடற்போர்வை
From Wikipedia, the free encyclopedia
புனித உடற்போர்வை, தூரின் நகர உடற்போர்வை (Shroud of Turin) (இத்தாலியம்: Sindone di Torino, Sacra Sindone) என்னும் பெயர்களால் அழைக்கப்படும் நார்மடி இத்தாலியின் தூரின் நகரில் பாதுகாக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அடக்கத் துணித் துண்டு ஆகும்.
இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருச்சாயல் அம்மனிதன் சிலுவையில் அறையப்பட்டு, வேதனையுற்ற தோற்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது.[1]
இந்த அடக்கத் துணி இத்தாலியின் தூரின் நகரில் புனித திருமுழுக்கு யோவான் பெருங்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருவச்சாயல் சிலுவையில் அறையுண்டு இறந்து, துணியால் பொதிந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உருச்சாயலாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். இந்த உருச்சாயல் இயல்பான தோற்றத்தைவிட கருப்பு-வெள்ளை ஒளிப்படத்தின் எதிர்மறை வடிவத்தில் அதிகத் தெளிவாகத் தெரிகிறது.