மணிப்பூர் வன்முறைகள், 2023
From Wikipedia, the free encyclopedia
2023 மணிப்பூர் வன்முறைகள் என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையில் வெடித்த வன்முறை ஆகும். இந்த மோதலில் 4 சூலை வரை, வன்முறையில் 142 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.[4] 300 பேருக்கும் மேல் காயமுற்றுள்ளனர்.[5][6][7] தோராயமாக 54,488 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.[8]
2023 Manipur violence | ||||
---|---|---|---|---|
தேதி | 3 மே 2023 - தற்போது வரை | |||
அமைவிடம் | ||||
காரணம் | மெய்தி மக்களுக்கும் பழங்குடியின குக்கி மக்களுக்கிடையே வன்முறைகள் | |||
முறைகள் | கலவரங்கள், தீ வைப்புகள் | |||
நிலை | தற்போதும் | |||
தரப்புகள் | ||||
உயிரிழப்புகள் | ||||
இறப்பு(கள்) | 142 (4 சூலை 2023 முடிய)[1] 80 பழங்குடியினர் உட்பட[2] [3] | |||
காயமுற்றோர் | 150+ |
14 ஏப்ரல் 2023 அன்று மெய்தெய் மக்கள் சங்கத்தின் ரிட் மனுவின் அடிப்படையில் மணிப்பூர் உயர் நீதிமன்றம், மெய்தி சமூகத்தை, பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்" என்று மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.[9] இந்த உத்தரவை எதிர்த்து மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) மணிப்பூரின் அனைத்து மலை மாவட்டங்களிலும் வெகுஜன பேரணிகளை ஏற்பாடு செய்தது. இந்த பேரணிகளில் ஒன்றில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பிஷ்னுபூர் மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு குழுவினருடன் மோதினர், அதைத் தொடர்ந்து வீடு எரிக்கபட்டது.[10][11] உதாரணமாக, தலைநகர் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் முக்கியமாக வசிக்கும் குக்கி மக்களின், பூர்வீக நில உரிமைகள் தொடர்பாக தற்போதைய மாநில அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்படுவதாகக் கருதப்படுகிறார்கள்.[12] குக்கி மக்களில் பெரும்பாலோர் கிறித்தவர்கள்.
அசாம் ரைப்பிள்ஸ் மற்றும் இந்திய ராணுவத்தினர் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக நிலை நிறுத்தப்பட்டனர். [13] [14]மாநிலத்தில் இணைய சேவைகள் 5 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 144இன் கீழ் மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவதைத் தடை செய்யப்பட்டது. இந்திய துருப்புக்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு வழங்கப்பட்டது. 6 மே 2023 முதல் மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.[15]