மஹா விகாஸ் அகாடி
From Wikipedia, the free encyclopedia
மகா விகாசு அகாடி அல்லது மகாராட்டிரா விகாசு அகாடி (தமிழ்: மகாராட்டிரா முன்னேற்ற அணி, English: Maharashtra Devolopment Front), எம். வி. ஏ. என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது 2019 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சிவசேனா (உத்தவ் பிரிவு) ஷரத் தலைமையில் உத்தவ் தாக்கரே தலைமையில் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான அரசியல் கூட்டணியாகும். தேசியவாத காங்கிரசு கட்சி தேவகா சரத் பவார் மற்றும் இதேகாவின் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சி, பி. டபுள்யூ. பி. ஐ. இபொக (மா) மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் உருவானது.[1] [2] மவிஅ தற்போது மகாராட்டிரா சட்ட மேலவையில் மிகப்பெரிய கூட்டணியாக உள்ளது.[3] [4] மேலும் மகாராட்டிரா சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகவும் உள்ளது.[5]
மஹா விகாஸ் அகாடி | |
---|---|
சுருக்கக்குறி | எம்.வி.ஏ |
தலைவர் | உத்தவ் தாக்கரே (சிவசேனா (உத்தவ் பிரிவு)) |
தலைவர் | சரத் பவார்
(தேகக) |
தொடக்கம் | 26 நவம்பர் 2019 |
பிரிவு | ஜனநாயக முன்னணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 10 / 48 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 9 / 19 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராஷ்டிர சட்டமன்றம்) | 78 / 288 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவை) | 21 / 78 |
இந்தியா அரசியல் |
26 நவம்பர் 2019 அன்று நடந்த கூட்டத்திற்குப் பிறகு உத்தவ் தாக்கரே மவிஅவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 28 நவம்பர் 2019 அன்று மகாராஷ்டிர மாநிலத்தின் 19வது முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.[6] [7]