மாலவத் பூர்ணா
From Wikipedia, the free encyclopedia
மாலவத் பூர்ணா (Malavath Purna) (பிறப்பு: 10 சூன் 2000) இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மலையேற்ற வீரங்கனை ஆவார். இவர் 14-வது வயது முடியும் தருவாயில் உலகின் உயரமான எவரஸ்டை ஏறி சாதனை படைத்தார்.[1] 27 சூலை 2017 அன்று எல்பிரஸ் மலையை ஏறிக்கடந்தவர்.[2] இவர் இறுதியாக 5 சூன் 2002 அன்று, 7-வது கொடிமுடியான வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள 6,190 மீட்டர் உயரமுள்ள டெனாலி மலையில் ஏறி சாதனை படைத்தார்.[3]
விரைவான உண்மைகள் மாலவத் பூர்ணா, பிறப்பு ...
மாலவத் பூர்ணா | |
---|---|
பிறப்பு | 10 சூன் 2000 நிசாமாபாத் மாவட்டம், தெலங்காணா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | மினசோட்டா மாநில பல்கலைக்கழகம், மங்காடோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
பணி | மலை ஏற்ற வீரங்கனை |
மூடு
இவர் இளம் வயதில் உலகின் ஏழு கொடுமுடிகளை ஏறியமைக்காக புகழ் பெற்றவர். இவர் பள்ளிப்படிப்பை தெலங்காணாவில் முடித்த பின் மலையேற்றப் பயிற்சியை டார்ஜீலிங் இமயமலை மலையேற்ற பயிற்சி நிறுவனத்தில் பயின்றார்.