யோக-குண்டலினி உபநிடதம்
யோகக் கலையைப் பற்றிய இந்து நூல் / From Wikipedia, the free encyclopedia
யோக-குண்டலினி உபநிடதம் (Yoga-kundalini Upanishad) ( சமசுகிருதம் : योगकुण उपनिषत ) [1] சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இது 20 யோக உபநிடதங்களில் ஒன்றாகும்.[2] மேலும் கிருஷ்ண யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்ட 32 உபநிடதங்களில் ஒன்றாகும். [2] இராமனால் அனுமனுக்குக் கூறப்பட்ட முக்திகா நியதியில், இது 108 உபநிடதங்களின் தொகுப்பில் 86 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது..[3]
யோக-குண்டலினி உபநிடதம் | |
---|---|
Yoga-Kundalini Upanishad is a yoga text | |
தேவநாகரி | योगकुण्डलिनी |
உபநிடத வகை | Yoga |
தொடர்பான வேதம் | Krishna யசுர் வேதம் |
அத்தியாயங்கள் | 3 |
பாடல்களின் எண்ணிக்கை | 171 |
இது குண்டலினி யோகத்தின் விளக்கத்துடன் தொடர்புடைய மிகவும் குறிப்பிடத்தக்க உரையாகும்.[4] இது ஹத யோகம் மற்றும் லம்பிகா யோகத்தைப் பற்றி விவரிக்கிறது. கடைசி அத்தியாயம் முதன்மையாக சுய அறிவு, ஆன்மா, பிரம்மம் மற்றும் வாழும் விடுதலை பற்றிய தேடலைப் பற்றியது.[4] இது இந்து மதத்தின் சக்தி பாரம்பரியத் தாந்திரீகத்தைப் பற்றிய ஒரு முக்கியமான உரையாகும். மேலும் குண்டலினி யோகக் கலை பற்றிய மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.[5][6]
"மரத்தடிகளில் பற்றவைக்கும் நெருப்பு எரியாமல் எழுவது போல யோகப் பயிற்சி இல்லாமல், அறிவின் ஒளியை ஏற்றிவிட முடியாது" என உரை கூறுகிறது. [7] சித்தம், அல்லது மனம், சம்ஸ்காரங்கள் மற்றும் வசனங்களுக்கு (நடத்தை போக்குகள்) ஆதாரமாகவும், பிராணனின் விளைவுகளாகவும் உரையில் விளக்கப்பட்டுள்ளது.. பிராணனைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் யோகா நுட்பங்கள் உபநிடதத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.[4] இந்த நுட்பங்களில் மிதகாரம் (மிதமான, சமச்சீர் ஊட்டச்சத்து), ஆசனம், உள் சக்தியை எழுப்புதல் ஆகியவை யோகினியின் குண்டலினியைத் தூண்டுவதற்கான வழிமுறையாக வலியுறுத்தப்படுகின்றன.[8][9]