லியோ டால்ஸ்டாய்
உருசிய எழுத்தாளர் (1828-1910) / From Wikipedia, the free encyclopedia
கோமகன் இலியோ இடால்ஸ்டாய் (Leo Tolstoy) எனப் பரவலாக அழைக்கப்படும் இலெவ் நிக்கோலயேவிச் இடால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy[note 1][3] உருசியம்: Лев Николаевич Толстой,[note 2] பஒஅ: [ˈlʲef nʲɪkɐˈla(j)ɪvʲɪtɕ tɐlˈstoj]( கேட்க); இலியெவ் நிக்கலாயெவிச் தல்ஸ்தோய்; 9 செப்டம்பர் [யூ.நா. 28 ஆகத்து] 1828 – 20 நவம்பர் [யூ.நா. 7 நவம்பர்] 1910) என்பவர் ஓர் உருசிய எழுத்தாளர் ஆவார். எக்காலத்திலும் மிகச் சிறந்த நூலாசிரியர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.[4] இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காக 1902 முதல் 1906 வரை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுக்காக 1901, 1902, மற்றும் 1909 ஆகிய ஆண்டுகளிலும் முன்மொழியப்பட்டுள்ளார்; இவர் ஒரு முறை கூட நோபல் பரிசை வெல்லாதது மிகுந்த சர்ச்சைக்குரியதாக உள்ளது.[5][6][7][8]
இலியோ இடால்ஸ்டாய் Leo Tolstoy | |
---|---|
பிறப்பு | இலியோவ் நிக்கொலாயவிச் தல்சுத்தோய் (1828-09-09)9 செப்டம்பர் 1828 யாசுனயா பொல்யானா, தூலா மாகாணம், உருசியப் பேரரசு |
இறப்பு | 20 நவம்பர் 1910(1910-11-20) (அகவை 82) அசுத்தோப்பவா, ரியாசன் மாகாணம், உருசியப் பேரரசு |
அடக்கத்தலம் | யாசுனயா பொல்யானா, தூலா |
தொழில் | புதின, சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர், கட்டுரையாளர் |
மொழி | உருசியம் |
காலம் | 1847–1910 |
இலக்கிய இயக்கம் | இலக்கிய யதார்த்தவாதம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
துணைவர் | சோஃபியா பெர்சு (தி. 23 செப்டம்பர் 1862) |
பிள்ளைகள் | 13 |
குடும்பத்தினர் |
|
கையொப்பம் | |
இவர் ஓர் உருசிய உயர்குடிக் குடும்பத்தில் 1828ஆம் ஆண்டு பிறந்தார்.[4] போரும் அமைதியும் (1869) மற்றும் அன்னா கரேனினா (1878)[9] ஆகிய புதினங்கள் இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும். இவை மெய்மையியல் புனைவின் இமயங்களாகக் கருதப்படுகின்றன.[4] இவர் தன் 20களில் தன் பகுதியளவு சுய சரிதை முப்புதினங்களான குழந்தைப் பருவம், சிறு வயதுப் பருவம், மற்றும் இளமைப் பருவம் (1852–1856), மற்றும் தன் கிரிமியப் போர் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட செவசுதபோல் படங்கள் (1855) ஆகியவற்றிற்காக முதன் முதலில் இலக்கிய ரீதியான பாராட்டைப் பெற்றார். இவரது புனைவுகளில் பல பன்னிரு சிறுகதைகள், இவான் இலியிச்சின் இறப்பு (1886), குடும்ப மகிழ்ச்சி (1859), "நடன நிகழ்ச்சிக்குப் பிறகு" (1911), மற்றும் காஜி முராத் (1912) போன்ற பல குறும் புதினங்களும் அடங்கும். .
1870களில் டால்ஸ்டாய் ஓர் ஆழ்ந்த அறநெறி சார்ந்த பிரச்சனைகளை உணர்ந்தார். அதற்குப் பிறகு இவர் அதற்குச் சமமாகக் கருதிய ஆழ்ந்த ஆன்மீக விழிப்பையும் உணர்ந்தார். இது இவரது மெய்மையியல் படைப்பான ஒப்புக் கொள்ளுதல் (1882) நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு நாதரின் மலைச் சொற்பொழிவை மையமாகக் கொண்ட நன்னெறிக் கருத்துக்கள் குறித்த இவரது இலக்கிய விரிவுரையானது இவரை ஓரொ உள்ளார்வம் மிக்க அரசு வேண்டாக் கொள்கையுடைய கிறித்தவராகவும், அமைதிவாதியாகவும் மாற்றியது[4]. இவரது தெய்வத்தின் இராச்சியம் உனக்குள் உள்ளது (1894) போன்ற படைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள வன்முறையற்ற எதிர்ப்பு குறித்த இவரது யோசனைகள் 20ஆம் நூற்றாண்டின் முக்கியத் தலைவர்களான மோகன்தாசு கரம்சந்த் காந்தி[10] மற்றும் மார்ட்டின் லூதர் கிங்[11] ஆகியோர் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. ஹென்றி ஜார்ஜ் என்பவரின் ஜார்ஜியம் என்று அழைக்கப்பட்ட பொருளாதாரத் தத்துவத்தின் ஈடுபாடு கொண்ட பரிந்துரையாளராகவும் இவர் மாறினார். இத்தத்துவங்களைத் தனது படைப்புகளில், முக்கியமாக உயிர்த்தெழல் (1899) நூலில் இவர் ஒருங்கிணைத்து வெளியிட்டார்.