வங்காள மறுமலர்ச்சி
வங்காளத்தில் ௧௮௦௦ முதல் ௧௯௩௦ வரையிலான சமூக-கலாச்சார மற்றும் மத சீர்திருத்த இயக்கம் / From Wikipedia, the free encyclopedia
வங்காள மறுமலர்ச்சி (Bengal renaissance), (வங்காள மொழி: বাংলার নবজাগরণ; Bāṅlār nabajāgaraṇ; பா³ங்லார் நப³ஜாக³ரண்) பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில், 19-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு முடிய, வங்காள அறிஞர்கள், வங்காளப் பண்பாடு, சமூக, கல்வி, கலைத்துறைகளை மறுமலர்ச்சி அடையச் செய்தனர்.
19-ஆம் நூற்றாண்டில் இராசாராம் மோகன் ராய் (1772–1833), வங்காளச் சமூகத்தில் உடன்கட்டை ஏறல், விதவைத் திருமணம் போன்ற சமூகத் சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததன் மூலம், வங்காளத்தில் மறுமலர்ச்சி இயக்கத்தை துவக்கி வைத்தார். 20-ஆம் நூற்றாண்டில் இதனை இரவீந்திரநாத் தாகூர் (1861–1941) முடித்து வைத்தார்.
சத்யஜித் ராய் (1921-1992) போன்றவர்கள் திரைப்படத்துறையில் புதுமையைப் புகுத்தினார்கள். [1] 19-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் சமய, சமூக சீர்திருத்தவாதிகள், பல்துறை அறிஞர்கள், இலக்கிய அறிவாளர்கள், இதழாளர்கள், நாட்டுப் பற்று பேச்சாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இணைந்து வங்காள மறுமலர்ச்சியை துவக்கி வைத்தனர். [2]