வசந்த பஞ்சமி
From Wikipedia, the free encyclopedia
வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். வட இந்தியாவில், மக (மாசி) மாதம் (சனவரி - பிப்ரவரி) சுக்ல பட்ச (வளர்பிறை) ஐந்தாம் நாளான (பஞ்சமி) வசந்த பஞ்சமியன்று, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரசுவதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாளை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்படுகிற்து. [3]
விரைவான உண்மைகள் வசந்த பஞ்சமி, அதிகாரப்பூர்வ பெயர் ...
வசந்த பஞ்சமி | |
---|---|
மஞ்சள் பூக்களால் வசந்த பஞ்சமியை வரவேற்கும் இளவேனிற்காலம் | |
அதிகாரப்பூர்வ பெயர் | வசந்த பஞ்சமி |
பிற பெயர்(கள்) | சரஸ்வதி பூஜை |
கடைபிடிப்போர் | இந்துக்கள்[1] மற்றும் சீக்கியர்கள்[2] |
வகை | சமயப் பண்பாட்டுத் திருநள் |
முக்கியத்துவம் | இளவேனிற்காலம், அறுவடை, கல்வி துவக்குதல், சரஸ்வதி பூஜை[1] |
கொண்டாட்டங்கள் | சரஸ்வதி பூஜை, இசை நிகழ்ச்சிகள், குழந்தைகள் முதன்முதலில் கல்வி பயிலத்துவங்கும் நாள், மஞ்சள் நிற ஆடைகள் அணிதல், பல வண்ணப் பட்டங்களைப் பறக்க விடுதல்.[1][2] |
நாள் | Magha Shukla Panchami |
மூடு