ஸ்பென்சர் பேர்சிவல்
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் / From Wikipedia, the free encyclopedia
ஸ்பென்சர் பேர்சிவல் (Spencer Perceval, நவம்பர் 1, 1762 – மே 11, 1812) பிரித்தானியாவின் அரசியல்வாதியும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் கொலை செய்யப்பட்டவர் இவர் ஒருவரே.
விரைவான உண்மைகள் ஸ்பென்சர் பேர்சிவல்The Rt Hon Spencer Percival, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ...
ஸ்பென்சர் பேர்சிவல் The Rt Hon Spencer Percival | |
---|---|
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | |
பதவியில் அக்டோபர் 4, 1809 – மே 11, 1812 | |
ஆட்சியாளர் | மூன்றாம் ஜோர்ஜ் |
முன்னையவர் | வில்லியம் கவெண்டிஷ்-பெண்டின்க் |
பின்னவர் | ரொபேர்ட் ஜென்கின்சன் |
நிதி அமைச்சர் | |
பதவியில் மார்ச் 26, 1807 – மே 11 1812 | |
ஆட்சியாளர் | மூன்றாம் ஜோர்ஜ் |
முன்னையவர் | ஹென்றி பெற்றி-ஃபிட்ஸ்மோரிஸ் |
பின்னவர் | நிக்கலாஸ் வான்சிட்டார்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1762-11-01)1 நவம்பர் 1762 லண்டம் ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 11 மே 1812(1812-05-11) (அகவை 49) லண்டன், ஐக்கிய இராச்சியம் |
அரசியல் கட்சி | டோரி |
முன்னாள் கல்லூரி | டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ் |
மூடு
இவர் 1809 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பழமைவாதக் கட்சியின் சார்பில் நிதி அமைச்சராகவும் (Chancellor of the Exchequer) மற்றும் கீழவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுப் பின்னர் பிரதமரானார்[1].
இவரது காலத்திலேயே பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
நாடாளுமன்ற வாயிலில் மே 11, 1812 இல் பேர்சிவலை மனநோய் உள்ள ஜோன் பெல்லிங்ஹம் என்பவன் சுட்டுக்கொன்று காவல்துறையினரிடம் சரணடைந்தான். இவன் பின்னர் ஒரு வாரத்தின் பின்னர் தூக்கிலிடப்பட்டான்[2].