ஹோலி (பஞ்சாப்)
From Wikipedia, the free encyclopedia
பஞ்சாப் பகுதியின் ஹோலி, முல்தான் நகரிலுள்ள பிரகலாதபுரி கோவிலில் துவங்கிய பண்டிகையாகும்.[1][2] மூலப் பிரகலாதபுரி கோவில், முல்தான் நகரின் (கஷ்ய-பாப்புரா) அரசனான இரணியகசிபுவின் மகன் பிரகலாதனால் கட்டப்பட்டது.[3] இக்கோவில் பிரகலாதன் தன்னைக் காப்பாற்றத் தூணைப் பிளந்து வெளிப்பட்ட நரசிம்மருக்காகக் கட்டிய கோயில். [4][5][6][7] வசந்தத்தின் துவக்கத்தின் அடையாளமாகவும் ஹோலி அமைகிறது.[8][9]
ஹோலி இருநாட்களாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான முழுநிலவன்று ஹோலிகா தகனம் கொண்டாடப்படுகிறது. அடுத்த நாளான பஞ்சாபி நாட்காட்டியின் சேட் மாதத்தின் முதல் நாளில் ஹோலி கொண்டாடப்படுகிறது.[10]