இரண்டாம் கோவில்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் கோவில் (யூதம்) (Second Temple) என்பது எருசலேம் நகரில் "கோவில் மலை" (Temple Mount) என்னும் இடத்தில் கி.மு. 516 இலிருந்து கி.பி. 70 வரை நிலைபெற்றிருந்த யூத வழிபாட்டிடம் ஆகும்.[1]
இக்கோவில் கட்டப்படுவதற்கு முன், அது இருந்த இடத்தில் முதல் கோவில் என்று யூதர்களால் அழைக்கப்பட்ட சாலமோனின் கோவில் இருந்தது. அந்த முதல் கோவில் கி.மு. 586 ஆம் ஆண்டில் இரண்டாம் நெபுகத்னேசார் என்னும் பாபிலோனிய மன்னரால் அழிக்கப்பட்டு, யூத மக்கள் இனம் நாடுகடத்தப்பட்டது.
முதல் கோவிலும் இரண்டாம் கோவிலும் யூதர்களின் சமய வாழ்வில் பெருமுக்கியத்துவம் வாய்ந்தன.