சுத்ஸ்டாப்பெல்
From Wikipedia, the free encyclopedia
சுத்ஸ்டாப்பெல் Schutzstaffelⓘ (ஜெர்மன்) எஸ்எஸ் காவலர்கள் (SS Schutzstaffel) என சுருக்கமாக இட்லர் காலத்தில் ஜெர்மனியில் பணிபுரிந்த ஜெர்மனியப் பாதுகாப்பு படை வீரர்களை இப்படி அழைத்தனர். (Protective Squadron). ஆரம்பத்தில் ஊர்க்காவல் படையினராக செயல்பட்ட இப்பிரிவினர் பின்னர் ஃபியூரர் பாதுகாப்பு வீரர்களாகவும் செயல்பட்டனர். 1925 ல் இட்லரால் அவரின் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்ட இப்படைப்பிரிவு பின்னர் ஹெயின்ரிச் ஹிம்லர் தலைமையில் 1929 முதல் 1945 வரை நாசிக் கோட்பாட்டின் படி மனிதநேயத்திற்கு எதிராக செயல்பட இயக்கப்பட்டது. முதலில் சிறிய அளவில் துவக்கப்பட்ட இப்பிரிவு பின்னாளில் பெரிய அமைப்பாக விரிவடைந்து செயல்பட்டது. தனிப்படைப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு பின்னாளில் ஜெர்மன் இராணுவத்துடன் இணைந்தே செயல்பட்டது. இந்தப் படைப்பிரிவினரே நாசிக் கைதிகள் சிறைச்சாலைகளில் (நாசி வதை முகாம், எ.கா. டேச்சு கைதிகள் சிறைச்சாலை) பாதுகாவலர்களாக பணிபுரிந்தவர்கள். இவர்களின் கட்டுபாட்டில்தான் இட்லர் காலத்தில் ஜெர்மனியின் அனைத்துச் சிறைச்சாலைகளும் இயங்கின. இப்படைப்பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளில் மால்மெடிப் படுகொலை (1944 ல் பல்ஜ் போரில் நடந்தவை) குறிப்பிடப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் இப்பிரிவில் பணிபுரிந்த பலர் நேச நாட்டுப் படையினரிடமிருந்து தப்பிப்பதற்காக தென் அமெரிக்க நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் அங்கே ஒடிசா (ODESSA) என்ற அமைப்பின் பெயரால் செயல்பட்டனர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுத்ஸ்டாப்பெல் | |
---|---|
சேவையில் | 1923–1945 |
நாடு | ஜெர்மனி |
வகை | ஊர்க்காவல் |
அளவு | 38 பிரிவு (1945) |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் |
ஜூலியஸ் ஷிரக் (1925–1926) ஜோசப் பெர்க்ஒல்டு (1926–1927) |