கருக்கட்டல்
From Wikipedia, the free encyclopedia
கருக்கட்டல் என்பது இரு புணரிகள் இணைந்து ஒரு புதிய உயிரினம் உருவாகும் செயல்முறையாகும்.
விலங்குகளில் இது முட்டை, விந்து எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு முளையம் உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது. தாவரங்களில் மகரந்த மணிகளில் இருக்கும் புணரிக் கலமானது, முட்டைக் கலத்துடன் இணைந்து உருவாகும் செயல்முறையே கருக்கட்டல் எனப்படுகிறது.
கருக்கட்டலின் பின்னர் ஒரு தனி உயிரினம் உருவாகும் முழுமையான செயல்முறையை இனப்பெருக்கம் என்கின்றோம்.