கார்த்திகை பூர்ணிமா
இந்துக்களின் புனித நாள் / From Wikipedia, the free encyclopedia
கார்த்திகை பூர்ணிமா (Kartik Purnima) என்பது ஒரு இந்து, சீக்கிய, சைனக் கலாச்சார விழாவாகும். இது முழுநிலவு நாள் அல்லது கார்த்திகையின் பதினைந்தாவது சந்திர நாளில் (நவம்பர்-டிசம்பர்) கொண்டாடப்படுகிறது. இது திரிபுரி பூர்ணிமா என்றும் திரிபுராரி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இது சில சமயங்களில் தேவ-தீபாவளி எனவும் அழைக்கப்படுகிறது. இது தெய்வங்களின் விளக்குகளின் திருவிழாவாகும். கார்த்திகை தீபத் திருநாள் என்பது தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வெவ்வேறு தேதியில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கார்த்திகை வழிபாடு செய்வதால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பும் வங்காளிகளிடையே கார்த்திகை பூசை குழந்தை பிறப்புடன் (முக்கியமாக மகன்) தொடர்புடையது.
விரைவான உண்மைகள் கார்த்திகை பூர்ணிமா, பிற பெயர்(கள்) ...
கார்த்திகை பூர்ணிமா | |
---|---|
கார்த்திகை பூர்ணிமா: 28 நவம்பர் 2012 | |
பிற பெயர்(கள்) | திரிபுரி பூர்ணிமா, திரிபுராரி பூர்ணிமா, தேவ தீபாவளி, தேவ் தீபாவளி |
கடைபிடிப்போர் | இந்துக்களும், சைனர்களும் |
வகை | இந்து |
அனுசரிப்புகள் | புஷ்கர் ஏரியில் பிரம்மாவை கௌரவிக்கும் பிரார்த்தனைகளும், மத சடங்குகளும், விஷ்ணு, அரிகரனுக்கு பூசை, புஷ்கர் ஏரியில் குளித்தல் ஆகியன |
நாள் | கார்த்திகையின் முழுநிலவு நாள் |
தொடர்புடையன | வைகுண்ட சதுர்த்தசி |
மூடு