பெங்களூர்
கருநாடக மாநில தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
பெங்களூர் (Bangalore), அலுவல்முறையில் பெங்களூரு (Bengaluru, கன்னடம்: ಬೆಂಗಳೂರು, தமிழ்: வெங்களூர்) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்குப் பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும்[5] நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் உள்ளது. இங்கு கன்னடம் பேசுவோர் (44%), தமிழ் பேசுவோர் (28%), தெலுங்கு பேசுவோர் (14%) என்பதாக உள்ளது. நகரத்தின் பன்முகத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக பெங்களூருவின் மக்கட் தொகை 1 கோடியைத் தாண்டியது.
பெங்களூர்
ಬೆಂಗಳೂರು (கன்னடம்) வெங்களூர் | |
---|---|
பெங்களூரு | |
ஆள்கூறுகள்: 12°58′44″N 77°35′30″E | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
கோட்டம் | பெங்களூரு கோட்டம் |
மாவட்டம் | பெங்களூரு நகர மாவட்டம், பெங்களூரு ஊரக மாவட்டம் |
பரப்பளவு | |
• மாநகரம் | 741 km2 (286 sq mi) |
• மாநகரம் | 8,005 km2 (3,091 sq mi) |
ஏற்றம் | 920 m (3,020 ft) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | 84,43,675 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 560 xxx |
தொலைபேசி குறியீடு | +91-(0)80 |
வாகனப் பதிவு | பட்டியல்
|
இணையதளம் | www |
நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் முதலாம் கெம்பை கவுடர் இந்த இடத்தில் ஒரு செங்கல்லில் செய்த கலவைக் கோட்டையைக் கட்டினார். விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தின் நவீன வரலாறு துவங்கியது. பிரித்தானிய ஆட்சியின் போது, இந்நகரம் தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.
இன்று, ஒரு பெரிய வளரும் பெருநகரமாக, இந்தியாவின் புகழ்பெற்ற பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு இருக்கிறது. பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணி ஆகிய காரணங்களால், பெங்களூரு இந்தியாவின் 'சிலிகான் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது.[6] மக்கள்பரவலில் பன்முகத்தன்மை கொண்டதான பெங்களூரு பெரும் பொருளாதார மையமாகத் திகழ்வதோடு இந்தியாவில் மிகத் துரிதமாய் வளரும் பெரு நகரமாகவும் உள்ளது. 2015 ஆம் ஆண்டு பெங்களூரு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[7]