யமுனை ஆறு
வட இந்திய ஆறு / From Wikipedia, the free encyclopedia
யமுனை ஆறு (Yamuna River) வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
யமுனை சிலநேரங்களில் ஜமுனா அல்லது ஜம்னா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நீளமான நதி ஆகும். இது கங்கை நதியின் இரண்டாவது பொிய கிளை நதியாகும். இக் கிளை நதியானது யமுனோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. இந்நதி இந்தியாவில் உத்ரகாண்ட் மாநிலத்தில் கீழ் இமாச்சல மலைப் பகுதியில் உள்ள தென்மேற்கு சாிவில் உள்ள பாந்தர்பூஞ்ச் சிகரத்தில் இருந்து 6387 மீட்டர் உயரத்திலிருந்து உருவாகிறது. இந்த நதியின் மொத்தப் பயணத் தொலைவு 1,376 கிலோ மீட்டர் ஆகும். கங்கை ஆற்றுப் படுகையில் 40.02% நிலப்பகுதியில் இந்நதி பாய்கிறது. இது கங்கை ஆற்றுடன் அலகாபாத்தில் திாிவேணி என்ற இடத்தில் கலப்பதற்கு முன்னதாக கங்கையும் யமுனையும் கலக்கும் இடமான திாிவேணி சங்கமத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நதிதான் இந்தியாவிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது நோிடையாக கடலில் கலப்பதில்லை.
இது உத்ரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஹாியானா மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களைக் கடந்து செல்கிறது. முதலில் உத்ரகாண்ட் அதன் பிறகு டெல்லியைக் கடந்து, அதன் பொிய கிளை நதியான டானுடன் கலக்கிறது. சாம்பல் நதி யமுனையின் மிக நீளமான கிளை நதியாகும். இந்நதி சிந்து, பெட்வா, கென் போன்ற ஆற்றுப் படுகையைக் கொண்டிருக்கிறது. கங்கை - யமுனை சமவெளிப் பகுதிக்கும், இந்திய - கங்கைச் சமவெளிப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்நதி மிக செழிப்பான, வளமான பகுதியை உருவாக்குகிறது. 57 மில்லியன் மக்கள் யமுனை நதியால் பயன்பெறுகிறார்கள். இந்த நதி வருடத்திற்கு 10000 கன சதுர இலக்கங்கோடி மீட்டர் தூரம் பயணம் செய்கிறது. இந்த நதி பாசனத்திற்காக 96% பயன்படுத்தப்படுகிறது. டெல்லியின் 70% தண்ணீர்த் தேவை யமுனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது. இந்து மதத்தில் கங்கையைப் போலவே யமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக் கதைகளின்படி யமுனை நதி சூாிய கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி யமுனை யாமினாட் எனவும் கருதப்படுகிறது. யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
இமாச்சலத்திலிருந்து டெல்லியில் உள்ள விசிராபாத் என்ற இடம் வரை யமுனையின் நீரானது சுத்தமாகவுள்ளது. விசிராபாத் அணைக்கட்டிற்கும் ஓக்லா அணைக்கட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 இடங்களில் வடிகால் வாயிலாக கழிவு நீ்ர் ஆற்றில் கலந்து ஆற்றை அசுத்தமாக்குகின்றன. வீட்டுக் கழிவுகள், நகராட்சி கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகிய மூன்று முக்கியக் கழிவுகளால் யமுனை நதி அசுத்தப்படுத்தப்படுகிறது.