அசாம் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
அசாம் வலாறு என்பது கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய பகுதி மக்களின் சங்கமமாகும் அதாவது; திபெத்திய-பர்மிய (சீன-திபெத்திய), இந்தோ-ஆரிய, ஆஸ்த்ரோசியோடிக் ஆகிய பண்பாடுகளின் சங்கமமாகும். 1821 வரை இப்பகுதி மீது பர்மா பல நூற்றாண்டுகளாக படையெடுத்துள்ளது என்றாலும் பர்மாவின் காலனியாகவோ அதன் சிற்றரசாகவோ அசாம் இருந்தல்லை, 1826 இல் பிரித்தானியர் அசாமைக் கைப்பற்றினர்.
அசாமின் வரலாறு பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. இடைக்கால அசாமில் இருந்த அகோம் பேரரசு காலத்தில் தொடர் கால வரலாறு எழுதப்பட்டுள்ளது. இவை அகோம் மொழியிலும், அசாமி மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. அசாமின் பழங்கால வரலாறானது காமரூப சாசணங்களான செப்பேடுகள், கல்வெட்டுகள், களிமண் எழுத்துகள் வழியாக அறியப்படுகிறது; இந்த சாசணங்கள் வழியாக காமரூப பேரரசு அரசர்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்டப் பகுதிகளில் மானியங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளனர். மகாபாரதம் போன்ற காவியங்கள், காளிகா புராணம், யோகினி தந்திரம் போன்ற இடைக்கால நூல்கள் போன்றவற்றைக் கொண்டும் அசாம் பிராந்திய நாட்டுப்புறவியலைக் கொண்டும் அசாம் வரலாறு சீரமைப்பு செய்யப்பட்டுகிறது.
அசாம் வரலாற்றை நான்கு காலங்களாக பிரிக்கலாம். பண்டைய காலமானது சமுத்திர குப்தரின் அலகாபாத் தூணில் காமருபப் பேரரசை குறிப்பிட்டதில் இருந்து, அதாவது நான்காம் நூற்றாண்டில் காமரூப பேரரசு துவங்கியில் இருந்து துவங்குகிறது. இடைக்கால வரலாறானது வங்காள சுல்தான்களால் அசாம் தாக்கப்பட்டதில் இருந்து துவங்குகிறது, இந்த நிகழ்வு முதலில் 1207 இல் பக்த்தியாருதின் ஐபக் கில்ஜியால் நடத்தப்பட்டதாக கன்னி போரோக்சிபோவா கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது, பண்டைய பேரரசுகளின் சரிவுக்குப் பிறகு அதன் இடத்தில் நடுத்தர அரசுகளும் குறுநில அரசுகளும் வேகமாக நிரப்பி. 1826 இல் ஏற்பட்ட யாண்டாபோ உடன்படிக்கையால் பிரித்தானிய காலனி ஆதிக்கம் இங்கு உருவாக வழிவகுக்கப்பட்டது, காலனித்துவ காலத்திற்கு பிறகு 1947-ல் சுதந்திர இந்தியாவின் ஆட்சிக்காலம் துவங்கியது.