அசிதர்
From Wikipedia, the free encyclopedia
அசிதர் (Asita) கி மு ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த கடும் நேன்பு நோற்கும் துறவியாவார். கபிலவஸ்துவின் இளவரசர் சித்தார்த்தன் வருங்காலத்தில் மிகப்பெரிய பேரரசராகவோ அல்லது புத்தராகவோ விளங்குவார் என முன்பே கணித்துக் கூறியவர். இவரை காலதேவலா என்றும் அழைப்பர். [1]
கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களின் ஒருவரான காத்தியாயனர் இளமையில் உச்சையினி நகரத்தில் அசிதரிடம் வேத பாடங்கள் பயின்றவர்.