அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்
பன்னாட்டு அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் / From Wikipedia, the free encyclopedia
அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty) அல்லது(NNPT) அல்லது அணுவாயுதப் பரவல்தடுப்பு ஒப்பந்தம், அணுக்கரு ஆயுதங்கள் உருவாவதை தடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்[1]. 1968 இயற்றப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் 189 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்தியா,பாக்கித்தான், இசுரேல், வட கொரியா, தெற்கு சூடான்ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை.
விரைவான உண்மைகள் கையெழுத்திட்டது, இடம் ...
கையெழுத்திட்டது | 1 சூலை 1968 |
---|---|
இடம் | நியூ யார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
நடைமுறைக்கு வந்தது | 5 மார்ச் 1970 |
நிலை | ஏற்புறுதி ஐக்கிய இராச்சியம், உருசியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், மற்றும் 40 பிற நாடுகள். |
தரப்புகள் | 190 |
மூடு
தொடக்கத்தில் வட கொரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பிறகு அதை மீறியது. இறுதியாக 2003ல் இந்த அமைப்பில் இருந்து விலகிக்கொண்டது.