அல்பேயுவின் மகன் யாக்கோபு
From Wikipedia, the free encyclopedia
அல்பேயுவின் மகனான புனித யாக்கோபு (Ἰάκωβος, பண்டைய கிரேக்கத்தில் Iakōbos) என்பவர் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். இவர் அல்பேயுவின் மகன் யாக்கோபு என்றே அனைத்து ஒத்தமை நற்செய்தி நூல்களிலும் உள்ள திருத்தூதர்களின் பட்டியலில் அழைக்கப்படுகின்றார்.
விரைவான உண்மைகள் அல்பேயுவின் மகனானபுனித யாக்கோபு, திருத்தூதர் ...
அல்பேயுவின் மகனான புனித யாக்கோபு | |
---|---|
அல்பேயுவின் மகன் யாக்கோபுவின் சிலை, மாஃப்ரா அரண்மனை ஆலயம், போர்த்துகல் | |
திருத்தூதர் | |
பிறப்பு | தகவலில்லை |
இறப்பு | தகவலில்லை எகிப்து அல்லது எருசலேம் |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை |
திருவிழா | 1 மே (ஆங்கிலிக்க ஒன்றியம்), மே 3 (கத்தோலிக்கம்), 9 அக்டோபர் (கிழக்கு மரபுவழி திருச்சபை) |
சித்தரிக்கப்படும் வகை | தச்சர்களின் இரம்பம்; கம்பளி; புத்தகம் |
பாதுகாவல் | மருந்தகப் பணியாளர்; இறக்கும் நிலையில் இருப்போர்; இத்தாலி, கம்பளி நெய்பவர்; தொப்பி செய்பவர்கள்; உருகுவை[1] |
மூடு