ஆண்டாள்
7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். / From Wikipedia, the free encyclopedia
ஆண்டாள் தமிழகத்தில் பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.[4][5] வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
விரைவான உண்மைகள் ஆண்டாள், பிறப்பு ...
ஆண்டாள் | |
---|---|
பிறப்பு | பொ.ஊ. 7 அல்லது 8-வது நூற்றாண்டு[1][2][3] ஸ்ரீவில்லிபுத்தூர் |
இறப்பு | ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி |
இயற்பெயர் | கோதை |
சமயம் | இந்து மதம் |
தத்துவம் | ஸ்ரீ வைணவம் |
மூடு