ஆல்பிரெட் ஆட்லர்
From Wikipedia, the free encyclopedia
ஆல்பிரட் ஆட்லர் (Alfred W. Adler[1] 7 பெப்ரவரி 1870 – 28 மே 1937) என்பவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு உளச்சிகிச்சை மருத்துவர்,[2][3] உளவியல் ஆய்வாளர் மேலும் தனிநபர் உளவியலுக்காக சிறப்பாக அறியப்படுகிறார். தனிநபர் உளவியல் என்ற கல்விப்பிரிவின் நிறுவனரும் ஆவார். தாழ்வு மனப்பான்மை மனித ஆளுமையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்திக் கூறினார். பொது உளவியலின் மீள்பார்வை என்ற நூலில் தனி மனிதனின் உளவியல் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தியுள்ளார்.[4] தாழ்வுணர்ச்சியின் முக்கியத்துவத்திற்கு அவர் அளித்த அழுத்தம்,[3] தாழ்வு மனப்பான்மை, என்பது தனிமனித ஆளுமையைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமான ஒரு பங்கினை வகிக்கிறது என்பதை அங்கீகரிக்கச் செய்தது.[5] ஆல்பிரெட் ஆட்லர் மனிதர்களை தனித்தனி உறுப்புகளாக ஒவ்வொருவரையும் தனித்துவம் மிக்கவர்களாகக் கருதினார். அதனால் தான் இவருடைய உளவியல் தனிநபர் உளவியல் என பின்னர் அழைக்கப்பட்டது. (ஆர்க்லர் 1976).
ஆல்பிரட் ஆட்லர் | |
---|---|
பிறப்பு | (1870-02-07)7 பெப்ரவரி 1870 வியன்னா, ஆத்திரியா-அங்கேரி |
இறப்பு | 28 மே 1937(1937-05-28) (அகவை 67) அபர்டீன், இசுக்கொட்லாந்து |
வாழிடம் | ஆஸ்திரியா |
தேசியம் | ஆத்திரியர் |
துறை | உளச்சிகிச்சை, மனநோய் |
கல்வி கற்ற இடங்கள் | வியன்னா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | தனிநபர் உளவியல் தாழ்வு மனப்பான்மை |
துணைவர் | ரைசா |
ஆட்லர் தான் முதன்முதலில் தனிமனிதனை மறுசீரமைப்பு செய்தலில் சமூகக்கூற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் ஆவார், மேலும் சமூகத்தில் மனநலத்தின் அவசியத்தை உணர்த்தியவர் ஆவார்,.[6] பொது உளவியல் மீள்பார்வை என்ற பெயரிலான ஆய்வு ஒன்று இருபதாம் நுாற்றாண்டில் அதிகம் மேற்கோள் சுட்டப்பட்ட உளவியலாளர்களில் ஆட்லர் 67 ஆம் இடத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.[7]