இந்திய தேசியக் கொடி
பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்டது / From Wikipedia, the free encyclopedia
இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது இந்திய நாட்டின் தேசியக் கொடியாகும். ஒரு கிடைமட்ட செவ்வக வடிவ மூவர்ணக் கொடியான இதில், முறையே இளஞ்சிவப்பு (குங்குமப்பூ நிறம்), வெள்ளை மற்றும் பச்சை (இந்திய பச்சை) நிற பட்டைகள் உள்ளன. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் எனக் கூறப்படும் 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் உண்டு. 22 சூலை 1947 அன்று நடைபெற்ற இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டத்தின் போது இது தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்திய விடுதலை அடைந்த நாளான 15 ஆகத்து 1947 அன்று இந்திய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ கொடியாக மாறியது. இந்தக் கொடி பின்னர் 26 சனவரி 1950 அன்று இந்தியக் குடியரசின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பயன்பாட்டு முறை | தேசியக் கொடி |
---|---|
அளவு | 3:2 |
ஏற்கப்பட்டது | 22 சூலை 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-07-22) |
வடிவம் | மேலிருந்து கீழாக, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களும், நடுவில் கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரமும் உள்ளது. |
வடிவமைப்பாளர் | பிங்கலி வெங்கையா[N 1] |
இந்தக் கொடியானது, பிங்கலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து மகாத்மா காந்தியல் முன்மொழியப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கொடியான சுவராஜ் கொடியை அடிப்படையாகக் கொண்டது. கொடியின் நடுவில் இருந்த நூற்புச் சக்கரம், 1947 ஆம் ஆண்டு அசோகச் சக்கரத்தால் மாற்றம் செய்யப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் கொடிக் குறியீட்டில் திருத்தம் செய்யப்படுவதற்கு முன்பு, கொடியானது காதி துணியினால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிக்கப்பட்டிருந்தது. காதி என்பது கையால் சுழற்றப்பட்து நூட்கப்பட்ட ஒரு சிறப்பு வகை துணியாகும். கொடிக்கான உற்பத்தி செயல்முறை மற்றும் விவரக்குறிப்புகள் இந்திய தரநிலைகள் பணியகம் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
கொடியின் பயன்பாடு இந்தியக் கொடி மற்றும் தேசிய சின்னம் தொடர்பான சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது. முந்தைய சட்டம் இந்தியாவின் விடுதலை நாள் மற்றும் குடியரசு நாள் போன்ற தேசிய நாட்களைத் தவிர தனியார் குடிமக்களால் கொடியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தது. 2002 ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம், குடிமக்கள் கொடியை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் குறியீட்டை திருத்துமாறு இந்திய அரசுக்கு உத்தரவிட்டது.