இரண்டாம் அபினிப் போர்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாவது அபினிப் போர் (Second Opium War) இரண்டாம் ஆங்கிலோ-சீனப் போர், இரண்டாம் சீனப் போர், அம்புப் போர் அல்லது சீனாவுக்கான ஆங்கிலோ-பிரெஞ்சு பயணம் என்றெல்லாம் அழைக்கப்படும், [1] இது பிரித்தானிய பேரரசும், பிரெஞ்சு பேரரசும் சீனாவின் சிங் வம்ச அரசர்களை எதிர்த்துப் போரிட்டது . இந்தப்போர் 1856 முதல் 1860 வரை நீடித்தது.
விரைவான உண்மைகள் இரண்டாம் அபினிப் போர், நாள் ...
இரண்டாம் அபினிப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
அபினிப் போர்கள் பகுதி | |||||||||
பாலிகாவோவின் பாலம், போர் நடந்த ஒரு மாலை நேரம், எமில் பேயார்ட் |
|||||||||
|
மூடு
இது அபினிப் போர்களில் இரண்டாவது பெரிய யுத்தமாகும். சீனாவிற்கு அபினி ஏற்றுமதி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக போர் நடந்தது. இதன் விளைவாக சிங் வம்சத்திற்கு இரண்டாவது தோல்வி ஏற்பட்டது. பீக்கிங் மாநாட்டின் ஒப்பந்தங்கள் ஆங்காங்கின் ஒரு பகுதியாக கவுலூன் தீபகற்பத்தை விட்டுச்செல்ல வழிவகுத்தன.