இராம் கோபால் (நடனக் கலைஞர்)
From Wikipedia, the free encyclopedia
பிஸ்ஸானோ ராம் கோபால் (Bissano Ram Gopal) (பிரித்தானிய அரசின் ஒழுங்கு ) (20 நவம்பர் 1912 [1] - 12 அக்டோபர் 2003) ஒரு இந்திய நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான ஆவார். இவர் பெரும்பாலும் ஒரு தனிப்பாடலாக நடித்து தனது நீண்ட வாழ்க்கை முழுவதும் விரிவாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒரு நவீனத்துவவாதியான இவர், பாரம்பரிய இந்திய நடனத்தை பாலே ஆடற்கலையுடன் இணைத்து நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.[2] மேலும், இந்திய நடனக் கலைஞர் உதய் சங்கருடன் சேர்ந்து 1930களில் மேலை நாடுகளில் இந்தியப் பாரம்பரிய நடனத்தை முதன்முதலில் வெளிப்படுத்தவும் செய்தார்.[3] போலந்து விமர்சகர் ததேயஸ் ஜெலென்ஸ்கி இவரை "இந்தியாவின் நிஜின்ஸ்கி" என்று அழைத்தார். "
ஒரு நடன இயக்குனராக, லெஜண்ட் ஆஃப் தாஜ்மஹால், டான்ஸ் ஆஃப் தி செட்டிங் சன், டான்ஸஸ் ஆப் இந்தியா போன்ற தனது நடனத் தயாரிப்புகளுக்காக மிகவும் பிரபலமானவர்.[4] 1960 ஆம் [5] நடனக் கலைஞரான அலிசியா மார்கோவாவுடன் இணைந்து நிகழ்த்திய "இராதா-கிருஷ்ணா" என்ற நிகழ்ச்சிக்காவும் இவர் குறிப்பிடப்படுகிறார் [6]