எகிப்தின் பாரூக்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் பாரூக் (Farouk I) (11 பிப்ரவரி 1920 - 18 மார்ச் 1965) இவர் முகம்மது அலி வம்சத்திலிருந்து எகிப்தின் பத்தாவது ஆட்சியாளராகவும், எகிப்து மற்றும் சூடானின் இறுதி மன்னனாகவும் இருந்தார். இவரது தந்தை முதலாம் புவாத் என்பவருக்குப் பின் 1936 இல் பதவிக்கு வந்தார். 1952 ஆம் ஆண்டு எகிப்திய புரட்சியில் இவர் பதவிலிருந்து தூக்கியெறியப்பட்டு, பின்னர், 1965 இல் இத்தாலிக்கு நாடுகடத்தப்பட்டார்.
விரைவான உண்மைகள் முதலாம் பாரூக், எகிப்து மற்றும் சூடானின் மன்னன் ...
முதலாம் பாரூக் | |
---|---|
இராணுவ உடையில் பாரூக் மன்னன் (1948) | |
எகிப்து மற்றும் சூடானின் மன்னன்[1] | |
பிறப்பு | (1920-02-11)11 பெப்ரவரி 1920 அப்தீன் அரண்மனை, கெய்ரோ, எகிப்திய சுல்தானகம் |
இறப்பு | 18 மார்ச்சு 1965(1965-03-18) (அகவை 45) சான் கேமிலோ மருத்தவமனை, உரோம், இத்தாலி |
அரசமரபு | முகமது அலி வம்சம் |
தந்தை | எகிப்தின் முதலாம் புவாத் |
தாய் | நஸ்லி சப்ரி |
மதம் | இசுலாம் |
கையொப்பம் |
மூடு
இவரது சகோதரி, இளவரசி பௌசியா புவாத், பகலவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும், ஈரான் நாட்டின் கடைசி அரசரும் முகம்மத் ரிசா ஷா பகலவியின் முதல் மனைவியாவார். [2]