எலிசபெத் கேடி ஸ்டாண்டன்
From Wikipedia, the free encyclopedia
எலிசபெத் கேடி ஸ்டாண்டன் (Elizabeth Cady Stanton) (1815 நவம்பர் 12 - 1902அக்டோபர் 26) 1800களின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை அமெரிக்காவில் பெண்கள் உரிமை இயக்கத்தின் தலைவராக இருந்தார். 1848 அமெரிக்காவின் நடந்த செனெகா பால்ஸ் மாநாட்டின் பின்னணியில் முக்கிய சக்தியாக இருந்தவர். பெண்களின் உரிமைகளைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரே நோக்கத்திற்காக அழைக்கப்பட்ட முதல் மாநாடாகும். மேலும், அதன் உணர்வுகள் பிரகடனத்தை எழுதிய முதன்மை எழுத்தாளர் ஆவார். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோருவது மாநாட்டில் ஒரு சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் இது விரைவில் பெண்கள் இயக்கத்தின் மையக் கொள்கையாக மாறியது. இவர் மற்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைகளிலும், குறிப்பாக அடிமை ஒழிப்பு இயக்கத்திலும் தீவிரமாக இருந்தார்.
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
எலிசபெத் கேடி ஸ்டாண்டன் 1880கள், வயது 65 | |
பிறப்பு | எலிசபெத் கேடி (1815-11-12)நவம்பர் 12, 1815 ஜான்ஸ்டவுன், நியூயார்க்கு, அமெரிக்க ஐக்கிய நாடு |
இறப்பு | அக்டோபர் 26, 1902(1902-10-26) (அகவை 86) நியூயார்க்கு நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு |
பணி | எழுத்தாளர், பெண்கள் வாக்குரிமை இயக்கவாதி, பெண்களின் உரிமைகள் செயல்பாட்டாளர், அடிமை ஒழிப்பு இயக்கவாதி |
பெற்றோர் | டேனியல் கேடி(1773–1859) மார்கரெட் இலிவிங்ஸ்டன் கேடி (1785–1871) |
வாழ்க்கைத் துணை | ஹென்றி ப்ரூஸ்டர் ஸ்டாண்டன் (தி. 1840; இற. 1887) |
பிள்ளைகள் | 7 |
கையொப்பம் |
மூடு