ஐயம்
From Wikipedia, the free encyclopedia
ஐயம் என்பது நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. உண்மை எனச் சொல்லப்படும் ஒரு விடயம், ஒரு செயற்பாடு, ஒரு நோக்கம், அல்லது ஒரு முடிவு போன்றவற்றின் மீது நிச்சயமின்மை, நம்பிக்கைக் குறைவு அல்லது உறுதிப்பாடில்லாத தன்மையை இது குறிக்கிறது. ஒரு கருத்தமைவு அல்லது உண்மைநிலை எனக் கருத்தப்படும் ஒன்றை ஐயம் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதனால், குறித்த செயற்பாடோ, விடயமோ பிழையாக அல்லது குற்றமாக அல்லது பொருத்தமற்றதாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் காரணமாகக் குறித்த விடயத்தை அல்லது செயற்பாட்டைத் தாமதமாக்கும் நிலை அல்லது முற்றாகவே மறுத்தொதுக்கும் நிலை ஏற்படுகிறது. "ஐயம்" என்பதற்கான வரைவிலக்கணங்கள் சில, மனம் இரண்டு முரண்பட்ட கருத்துக்களிடையே தத்தளித்துக் கொண்டு எந்தவொரு பக்கத்துக்கும் செல்ல முடியாத ஒரு நிலையைக் குறித்துக் காட்டுகின்றன.[1] ஐயம் என்னும் கருத்துரு பல தோற்றப்பாடுகளை உள்ளடக்குவதாக அமைகின்றது. ஐயம் என்பதை, ஒரு விடயத்தின் நம்பகத்தன்மை குறித்துத் திட்டமிட்ட கேள்வி எழுப்புதலாகவும், ஒரு உணர்வு சார்ந்த, முடிவு எடுக்க முடியாத ஒரு நிலையாகவும் கொள்ள முடியும்.