ஓடப்பாட்டு
From Wikipedia, the free encyclopedia
ஓடத்தைத் தள்ளுகிறவர்கள், தம்முடைய வேலையில் அலுப்புத் தோன்றாமலிருக்கும் பொருட்டு, பாடிக்கொண்டே தள்ளுவது வழக்கம். ஓடத்தை கரையருகே இழுத்துச் செல்லும் போதும் பாடுவது உண்டு. இப்பாட்டுக்களையே, ஓடப்பாட்டு என்று அழைக்கிறோம். இவை நாடோடிப் பாடல்களைச் சேர்ந்தவை ஆகும். இவற்றில் ஒவ்வொரு நிறுத்தத்திலும் 'ஏலேலோ, ஐலசா' என்ற சொற்கள் மாறிமாறி வரும். மேலும், வேறுபட்ட சொல் அமைப்புகளும் வேறுபட்டும் பாட்டுகள் பாடப்படுகின்றன. எடுத்துக்காட்டு வருமாறு;-
- மரத்தை நம்பி 'ஏலேலோ', கிளை இருக்கு 'ஐலசா'...
- ஏலேலங்கிடி லேலம், ஏலேலக் கிளி லல்ல...