களை
From Wikipedia, the free encyclopedia
களை (Weed) என்பது குறிப்பிட்ட சூழலில் அமையும் தேவையற்ற தாவரம் அல்லது தவறான இடத்தில் வளரும் தாவரம் ஆகும். பொதுவாக, மனிதனால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள், புல்தரைகள், வயல்கள் போன்ற கட்டுப்பாடான சூழல்களில் வளரும் தேவையற்ற தாவர த்தை இது குறிக்கும். பொதுவாக, இச் சொல் வேகமாகப் பெருகும் தாயக, அயல் இடத்துத் தாவரங்களைக் குறிக்கப் பயன்படுகின்றது. வகைப்பாட்டியலாக தாவரவியலில் களை எனும் சொல் அவ்வளவு பொருளுள்ள சொல் அல்ல. ஒரு சூழலில் களையாக அமையும் தாவரம், அது வேண்டப்படும் வேறொரு சூழலில் அது களையல்ல; பயனுள்ள தாவரமாகும். அங்கு அதே பேரினத்தைச் சேர்ந்த வேறொரு தாவரம் களையாகிவிடும்.. அதாவது பயிரிடப்படும் உலோகன்பெரியில் வளரும் பிராம்புள் பெரி களையாகி விடுகிறது. இதே போல, நாம் விரும்பி வளர்க்கும் பயிரே, அடுத்த பயிரில் வளர்ந்தால் அதுவும் களையே. நாம் களையெனக் கருதும் பல தாவரங்கள் தோட்டம் போன்ற சூழல்களில் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் இவை நலந்தரும் களைகள் எனப்படுகின்றன. மிகவும் வேகமாக வளரும் முனைப்பாக இனப்பெருக்கம் செய்யும் தாவரமும் களை எனப்படும். அல்லது அதன் முதல் வாழிடச் சூழலுக்கு வெளியேஆதுவே முற்றுகை இனங்கள் எனப்படும்.[1] மிக விரிந்த பொருளில் "களை " என்பது பன்முகச் சுற்றுச்சூழல்களில் தரித்து வாழ்வதோடு வேகமாகத் தன்னைப் பெருகச் செய்ய வல்லதாகும்; இந்தப் பொருளில் இது மாந்தருக்கும் கூடப் பொருந்தும்.[2]
களைகள் பயிர்களுக்கு இடையே வளரும் விரும்பத்தகாத, பயிர்களுக்குண்டான நீர், நில வளங்களுக்குப் போட்டியிட்டு, பயிர் விளைச்சலுக்கும், மனித மேம்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாகின்றன . [3].
பல காரணங்களால் களைகள் தேவையற்றனவாகக் கருதப்படலாம். பயிர்களுக்கு மண்ணிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்களுக்குப் போட்டியிடுவதனால் பயிர்களின் வளர்ச்சிக்குக் குந்தகமாக இருத்தல், பயிர்களுக்குக் கிடைக்க வேண்டிய சூரிய ஒளியைத் தடுத்தல், பார்வைக்கு அழகற்றனவாக இருத்தல் என்பன இவற்றுட் சில. இவை நோய்க்காரணிகளுக்கு இடம் கொடுத்து, பிற பயிர்களுக்குத் தொற்றை ஏற்படுத்தி அவற்றின் தரம் குறைவதற்குக் காரணமாகவும் அமையக்கூடும். சில களைகள் முட்களைக் கொண்டுள்ளன, வேறு சில தொடும்போது அரிப்பை உண்டாக்குவனவாக இருக்கின்றன, வேறு சிலவற்றின் பகுதிகள் உடலிலோ ஆடைகளிலோ ஒட்டிக்கொண்டு விடுகின்றன. இதனாலும் இக் களைகள் விரும்பப்படாதன ஆகின்றன. களைக் கட்டுபாடு வேளாண்மையில் மிகவும் இன்றியமையாததாகும். களைக் கட்டுபாட்டு முறைகளில் ஏரால் உழுதல், தன்னியக்க எந்திரமுறை உழுதல், தொளறுகொண்டு களையெடுத்தல், மண் பதப்படுத்தல், சூடாக்கி அல்லது எரித்து களை நீக்குதல், களைக்கொல்லி வேதிப் பொருட்களைப் பயன்கொள்ளல் ஆகியன உள்ளடங்கும்.