கிளாந்தான் மந்திரி பெசார்
கிளாந்தான் மாநிலத்தின் அரசுத் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
கிளாந்தான் மந்திரி பெசார் அல்லது கிளாந்தான் முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Kelantan அல்லது First Minister of Kelantan; மலாய்: Menteri Besar Kelantan; சீனம்: 吉兰丹州务大臣) என்பவர் மலேசிய மாநிலமான கிளாந்தான் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆவார். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் என்று அழைப்பது வழக்கம். இவர் கிளாந்தான் மாநில சட்டமன்றத்தின் (Kelantan State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் கிளாந்தான் மந்திரி பெசார் Menteri Besar of Kelantan Menteri Besar Kelantan, உறுப்பினர் ...
கிளாந்தான் மந்திரி பெசார் Menteri Besar of Kelantan Menteri Besar Kelantan | |
---|---|
கிளாந்தான் மந்திரி பெசார் கொடி | |
கிளாந்தான் மாநில அரசு | |
உறுப்பினர் | கிளாந்தான் மாநில ஆட்சிக்குழு |
அறிக்கைகள் | கிளாந்தான் மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | JKR 10, Bangunan Perbadanan Menteri Besar Kelantan, கம்போங் சீரே, கோத்தா பாரு, கிளாந்தான் |
அலுவலகம் | Tingkat 1, Blok 1, கோத்தா தாருல் நாயிம், 15502 கோத்தா பாரு, கிளாந்தான் |
நியமிப்பவர் | ஐந்தாம் முகமது| கிளாந்தான் சுல்தான் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | லோங் அப்துல் காபார் (Long Abdul Ghafar) |
உருவாக்கம் | 1775; 249 ஆண்டுகளுக்கு முன்னர் (1775) |
இணையதளம் | www |
மூடு
தற்போது கிளாந்தான் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் முகமது நசுருதீன் தாவூத் (Mohd Nassuruddin Daud). இவர் 15 ஆகஸ்டு 2023 முதல் கிளாந்தான் மாநிலத்தின் முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.