குமிழறை
From Wikipedia, the free encyclopedia
குமிழ் அறை (bubble chamber) என்பது அயனியாக்கும் தன்மை கொண்ட துகள்களின் இயக்கத்தை, அவைகளின் பாதையை அறிய கூடிய அதிவெப்பமூட்டப்பட்ட ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட நீர்மம் (பொதுவாக நீர்ம ஐதரசன்) கொண்ட ஒரு கலன் ஆகும். இதனை 1952 ஆம் ஆண்டில் டொனால்ட் கிளேசர் என்பவர் கண்டுபிடித்தார்.[1] இக்கண்டுபிடிப்புக்காக இவருக்கு 1960 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.[2]
முகிலறைகள் குமிழறைகளின் தத்துவத்திலேயே வேலை செய்கின்றன. ஆனால், முகிலறைகளில் அதிக வெப்பமாக்கிய நீர்மத்திற்குப் பதிலாக அதிகம் நிரம்பிய ஆவி பயன்படுத்தப்படுகிறது.