குரு அர்கோவிந்த்
From Wikipedia, the free encyclopedia
குரு அர்கோவிந்த் (Guru Hargobind, ஹர்கோபிந்த்) அல்லது சச்சா பாதுசா ("மெய்யான பேரரசர்"), (19 சூன் 1595 – 3 மார்ச் 1644)[1][2] ஆறாவது சீக்கிய குரு ஆவார். முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரால் தனது தந்தை குரு அர்ஜன் கொல்லப்பட்டதால் பதினோராவது அகவையிலேயே மே 30, 1606இல் குருவாக பொறுப்பிலமர்ந்தார்.[3] இசுலாமிய சமய ஒறுப்பை எதிர்க்கவும் சமய சுதந்திரத்தைக் காக்கவும் சீக்கியத்தினுள் படைத்துறை மரபை துவக்கியதற்காக இவர் அறியப்படுகின்றார்.[3][4] 37 ஆண்டுகள், 9 மாதங்கள், 3 நாட்கள் குருவாக பொறுப்பாற்றி நீண்ட காலம் பொறுப்பிலிருந்த குருவாக விளங்குகின்றார்.
விரைவான உண்மைகள் குரு அர்கோவிந்த்ਗੁਰੂ ਹਰਿਗੋਬਿੰਦ ਜੀ, பிறப்பு ...
குரு அர்கோவிந்த் ਗੁਰੂ ਹਰਿਗੋਬਿੰਦ ਜੀ | |
---|---|
தாள் ஓவியம் அரசு அருங்காட்சியகம், சண்டிகர் | |
பிறப்பு | 19 சூன் 1595 குரு கி வடாலி, அம்ரித்சர், பஞ்சாப், இந்தியா |
இறப்பு | மார்ச்சு 3, 1644(1644-03-03) (அகவை 48)[1] கீரத்பூர் சாகிப், இந்தியா |
மற்ற பெயர்கள் | ஆறாம் ஆசிரியர் சச்சா பாதுசா |
அறியப்படுவது | பட்டியல்
|
முன்னிருந்தவர் | குரு அர்ஜன் |
பின்வந்தவர் | குரு அர் ராய் |
சமயம் | சீக்கியம் |
பெற்றோர் | குரு அர்ஜன் & மாதா கங்கா |
வாழ்க்கைத் துணை | மாதா தமோதரி, மாதா நாநாகி, மாதா மகா தேவி |
பிள்ளைகள் | பாபா குர்திதா, பாபா சூரஜ் மால், பாபா அனி ராய், பாபா அடால் ராய், குரு தேக் பகதூர், பிபி பிரோ |
மூடு