குலாபி கேங்
From Wikipedia, the free encyclopedia
குலாபி கேங் (Gulabi gang) ஒரு இந்தியப் பெண்கள் குழு. இக்குழு இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புண்தில்கண்ட் பகுதியில் உருவானது[1]. தொடர்ந்து வட இந்தியா முழுவதும் இக்குழு செயல்பட்டு வருகிறது.[2] அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் சமுதாய, அதிகார அநீதிகளைத் தட்டிக் கேட்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதன் உறுப்பினர்கள் அனைவரும் பெண்கள். இவர்கள் ரோஜா நிறச் சேலை அணிந்து கையில் ஒரு நீண்ட கழியுடன் பணியில் ஈடுபடுகின்றனர்.