கைட்ரிடியோமைகோசிஸ்
நீர்நில வாழ்வனவற்றைத் தாக்கும் ஒரு தொற்று நோய் / From Wikipedia, the free encyclopedia
கைட்ரிடியோமைகோசிஸ் (Chytridiomycosis) என்பது நீர் நிலவாழ்வனவற்றுக்கு பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த்தொற்று ஆகும். இது பெரும்பாலும் கைட்ரிடு எனும் பூஞ்சையால் ஏற்படுகிறது. கைட்ரிடியோமைகோசிஸ் பாதிப்பால் மேற்கு வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்கா (தன்சானியா)[1] மற்றும் கரிபியனின் டொமினிக்கா மற்றும் மொன்செராட் ஆகிய பகுதிகளில் உள்ள பெருமளவிலான நில நீர்வாழ்வன இனங்களின் அழிவுக்குக்குக் காரணமாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில் புதிய உலகில் இந்த நோயின் ஆபத்து மிகுதியாக உள்ளதாக கருதப்படுகிறது.[2] இந்த நோயை உருவாக்கும் பூஞ்சைகளை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன, என்றாலும் அவை பெரிய அளவுக்கு சாத்தியமுள்ளதாக நிரூபிக்கப்படவில்லை. உலகளாவில் 30% நிலப்பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு உள்ளதாக அறியப்படுகிறது. உலகளாவில் நீர் நிலவாழ்வினவற்றின் எண்ணிக்கைச் சரிவுக்கான காரணியாக இந்நோய் குறிப்பிடப்படுகிறது.[3]
இந்தப் பூஞ்சையானது நீர்நிலவாழ்விகளான தவளைகளின் தோலில் வளர்கிறது. இதனால் அவற்றின் உடலில் இருக்கும் ஈரத்தன்மையின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அவற்றின் உடலுக்குள் உதிரப்போக்கு ஏற்பட்டு, மாரடைப்பால் இறக்கின்றன.