கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம்
From Wikipedia, the free encyclopedia
கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் (Kokavil transmission tower) இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கொக்காவில் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கோபுரம் 2011, சூன் 6 இல் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் உயரம் 174 மீற்றர் ஆகும். 1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் 100 மீற்றர் உயரத்தில் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. வடக்கே இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையால் இக்கோபுரம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது.
விரைவான உண்மைகள் கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம், பொதுவான தகவல்கள் ...
கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முழுமையானது |
வகை | பல செயற்பாட்டு தொலைத்தொடர்பு கோபுரம் |
கட்டிடக்கலை பாணி | பின்னல் கோபுரம் |
இடம் | கொக்காவில், முல்லைத்தீவு, இலங்கை |
நாடு | Sri Lanka |
நிறைவுற்றது | 1982 (Restored in 2011) |
திறப்பு | 6 சூன் 2011[1] |
இடிக்கப்பட்டது | 2006[2] |
செலவு | ரூபா 330 மில்லியன் |
உயரம் | |
கூரை | 174 m (571 அடி)[1] |
மூடு