கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
From Wikipedia, the free encyclopedia
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders சுருக்கமாக KKR எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய முதன்மைக் குழுப் போட்டிகளில் கொல்கத்தா நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறைத் துடுப்பாட்ட அணியாகும். இதன் உரிமையாளர்களாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான், நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மெஹ்தா ஆகியோர் உள்ளனர். இதன் உள்ளக அரங்கமாக ஈடன் கார்டன்ஸ் உள்ளது.[2]
தொடர் | இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள் | |
---|---|---|
தனிப்பட்ட தகவல்கள் | ||
தலைவர் | சிரேயாஸ் ஐயர் | |
பயிற்றுநர் | பிரண்டன் மெக்கல்லம்[1] | |
உரிமையாளர் | ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட், மெஹ்தா குழுமம் | |
அணித் தகவல் | ||
நகரம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | |
நிறங்கள் | ||
உருவாக்கம் | 2008 | |
உள்ளக அரங்கம் | ஈடன் கார்டன்ஸ் | |
கொள்ளளவு | 68,000 | |
அதிகாரபூர்வ இணையதளம்: | kkr.in | |
| ||
இந்த அணி 2011 இல் முதல் முறையாக ஐபிஎல் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 2012 இல் சென்னை சூப்பர் கிங்ஸை இறுதிப் போட்டியில் தோற்கடித்து ஐபிஎல் வாகையாளர் ஆனது. 2014 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்து மீண்டும் வாகையாளர் ஆனது. [3]
கொல்கத்தா அணிக்காக அதிக ஓட்டங்களை எடுத்தவராக கவுதம் கம்பீரும்[4] அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவராக சுனில் நரைனும் உள்ளனர்.[5] இதன் அலுவல்முறை நிறங்களாக ஊதாவும் பொன்னிறமும் உள்ளன.