சிரியா-லெபனான் போர்த்தொடர்
From Wikipedia, the free encyclopedia
சிரியா-லெபனான் போர்த்தொடர் (Syria–Lebanon Campaign) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகள் விஷி பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியா மற்றும் லெபனான் பகுதிகளைக் கைப்பற்ற மேற்கொண்ட போர் நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஜூன்-ஜூலை, 1941 காலகட்டத்தில் நடைபெற்ற இப்போர்த்தொடர் நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இது எக்ஸ்போர்ட்டர் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.
சிரியா-லெபனான் போர்த்தொடர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி | |||||||
நேசப் படைகளின் தாக்குதல் வரைபடம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியம் | விஷி பிரான்சு
ஜெர்மனி [2] |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஆர்ச்சிபால்ட் வேவல் [3] ஹென்ரி வில்சன் [4] ஜான் லவராக் | ஹென்ரி டெண்ட்ஸ் | ||||||
பலம் | |||||||
~ 34,000 படைவீரர்கள்[nb 1] 50+ வானூர்திகள்[nb 2] 1 தரையிறக்கக் கப்பல் 1+ குரூசரகள் 6 டெஸ்டிராயர்கள்[6] | 45,000 வீரர்கள்[nb 3] 90 டாங்குகள்[nb 4] 289 வானூர்திகள்[nb 5] 2 டெஸ்டிராயர் ரக கப்பல்கள்[nb 6] 3 நீர்மூழ்கிகள்[6] |
||||||
இழப்புகள் | |||||||
~4,052 [nb 7] 27 வானூர்திகள்[10] | 6,352[nb 8] – 8,912 [5] 179 வானூர்திகள்[nb 9] |
ஜூன் 1940 இல் பிரான்சு சண்டையில் தோல்வியடைந்த பிரான்சு நாசி ஜெர்மனியிடம் சரணடைந்தது. பிரெஞ்சு அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாசி ஜெர்மனியுடன் ஒத்துழைத்து அதன் ஆதரவுடன் விஷி அரசை உருவாக்கினர். இதனை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு பிரிவினர் சார்லஸ் டி கோல் தலைமையில் நாடுகடந்த விடுதலை பிரான்சு அரசை உருவாக்கினர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்த பிரெஞ்சு காலனிகள் அனைத்தும் இவ்விரு தரப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்தன. அவ்வாறு பிரெஞ்சுக் கட்டுப்பாட்டில் இருந்த சிரியா, லெபனான் ஆகிய பகுதிகள் விஷி அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அங்கு ஜெர்மானியர்களுக்கு படைத்தள வசதிகளை அமைத்துக் கொள்ள விஷி அரசு அனுமதி அளித்தது. மேலும் ஆங்கில-ஈராக்கியப் போரின் போது ஈராக்கில் போரிட்ட அச்சு படைப்பிரிவுகள் சிரியாவைத் தளமாகக் பயன்படுத்த முயன்றன. இக்காரணங்களால் நேச நாட்டு தளபதிகள் சிரியா மற்றும் லெபனான் மீது படையெடுத்து அவற்றை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டனர். ஜூன் 8, 1941 இல் இத்தாக்குதல் தொடங்கியது. நான்கு பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் சிரியா மீது படையெடுத்தன. பாலஸ்தீனத்திலிருந்து டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நோக்கி இரு படைப்பிரிவுகள் முன்னேறின. மேலும் ஈராக்கிலிருந்து வடக்கு மற்றும் மத்திய சிரியாவை இரு படைப்பிரிவுகள் தாக்கின. இவை தவிர கடல் வழியாகவும் வான் வழியாகவும் விஷி படைகளை நேச நாட்டுப் படைகள் தாக்கின.
ஒரு மாத கால சண்டைக்குப் பின்னர் விஷி படைகள் சரணடைந்தன. சிரியா மற்றும் லெபனான் டி கோலின் விடுதலை பிரெஞ்சுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. 1943 மற்றும் 1944 இல் முறையே லெபனான் மற்றும் சிரியா இரண்டிற்கும் விடுதலை பிரெஞ்சுப் படைகள் சுதந்திரம் வழங்கின. விடுதலை அடைந்த இரு நாடுகளும் உடனடியாக அச்சு நாடுகள் மீது போர் சாற்றின.